எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் தாக்குதல்: 2 பேர் பலி

Last Updated : May 13, 2017, 10:46 AM IST
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல் தாக்குதல்: 2 பேர் பலி title=

காஷ்மீரின் எல்லைக் கோட்டை ஒட்டிய பகுதிகயில் அமைந்துள்ள நவ்சேரா உள்ளிட்ட பல பகுதிகளில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் நவ்சேரா பகுதியில் பொது மக்கள் 2 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர். 

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்சேரா பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படைகள், இந்திய பாதுகாப்பு நிலைகளை குறிவைத்து துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு இந்திய படைகளும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றன. 

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாக்., படைகள் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் பாதுகாப்பு கருதி, எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை ரஜோரி மாவட்டத்தின் நவ்சேரா மற்றும் மன்ஜகோட் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News