மத்திய பிரதேசத்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்!

மத்திய பிரதேசத்தில் 15 வயது சிறுமியை இருவர், பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Dec 8, 2017, 11:29 AM IST
மத்திய பிரதேசத்தில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்! title=

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் பகுதியைச் சேர்ந்த 15வயது சிறுமியை இரு நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட அந்த சிறுமி அருகில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை செய்ததாக கூறப்படும் இருவர் தப்பிச் சென்றுவிட்டனர். அவர்களை தேடும் பணியில் தீவிரமாக காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுபோன்ற சம்பவம் கடந்த மாதம் மத்தியபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பிய 19வயது மாணவியை நான்கு பேர் கொண்டகும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர். தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.

மேலும், இதுதொடர்பாக  வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

 

Trending News