இரத்தப்போக்கை 30 விநாடியில் நிறுத்தும் மலிவு பொடி...

இரத்தப்போக்கினை 30 விநாடிகளுக்குள் நிறுத்தும் மலிவு விலை பொடியினை இந்திய விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.

Last Updated : Dec 6, 2019, 02:16 PM IST
இரத்தப்போக்கை 30 விநாடியில் நிறுத்தும் மலிவு பொடி... title=

இரத்தப்போக்கினை 30 விநாடிகளுக்குள் நிறுத்தும் மலிவு விலை பொடியினை இந்திய விஞ்ஞானி கண்டுபிடித்துள்ளார்.

இந்திய இளம் விஞ்ஞானி மலிவான மற்றும் பயனுள்ள உள்நாட்டு தூளை உருவாக்கியுள்ளார். இது காயத்தின் மீது தெளித்தவுடன் 30 விநாடிகளுக்குள் இரத்தப்போக்கு நிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பொடிகள் வெளிநாடுகளில் பிரபலமாகிவிட்டன, ஆனால் இந்தியாவில் இத்தகு பொடிகளின் பிரவேசம் குறைவே. வெளிநாட்டில் இருந்து இந்த பொடிகளை வரவழைத்து பயன்படுத்த வேண்டினால் அதிக செலவழிக்க வேண்டியிருக்கும். இந்த பிரச்சனையினை போக்கும் விதமாக தற்போது இந்திய இளைஞர் இதற்கான மலிவு விலை பொடி ஒன்றினை கண்டறிந்துள்ளார். இந்த பொடியினை NIT (நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி) ரூர்கேலாவில் உள்ள பயோமெடிக்கல் இன்ஜினியரிங் நிறுவனமான எம்டெக் சபீர் உசேன் இந்த தொழில்நுட்பத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) அங்கீகரித்துள்ளது.

ஊடக அறிக்கையின்படி, வங்காளத்தின் கிழக்கு பர்தாமன் மாவட்டத்தில் கண்டகோஷைச் சேர்ந்த முபாரக் உசேன் மகன் சபீர் மேற்கொண்ட இந்த ஆராய்ச்சிக்கு சமீபத்தில் DRDO-வின் Dare to Dream Innovation போட்டியில் முதல் பரிசு கிடைத்துள்ளது. இதுகுறித்து சபீர் தெரிவிக்கையில்., ஒரு விபத்தில் அதிகப்படியான இரத்தம் போக்கு காரணமாக மக்கள் இறப்பது பற்றி அடிக்கடி கேள்விப்பட்டேன். அப்போது நான் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் படித்த பின்னர் இதற்கான பெரிய செயல் ஒன்றை செய்வேன் என முடிவு செய்தேன். இதனால் மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும். இந்த ஸ்டாப் பிளீட் பவுடர் மரணத்திலிருந்து இறக்கும் மக்களுக்கு ஒரு உயிர்நாடியாக செயல்படும் என தெரிவித்துள்ளார். சபீரின் இந்த முயற்சியானது தற்போது காப்புரிமை பெற தயாராகி வருகிறது.

தனது அறிக்கையில், சபீர் தனது ஆய்வின் போது இதுபோன்ற பொருளாதார மற்றும் பயனுள்ள பொடியை தயாரிக்க ஆராய்ச்சியைத் தொடங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். 2017-ல், M.Tech முடித்த சபீர், இதன் பின்னர் தனக்கு ஒரு நல்ல நிறுவனத்தில் உதவி பொறியாளர் வேலை கிடைத்தது என்றும், ஆனால் அந்த பணியில் தான் சேரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மருந்துகளை உருவாக்கி ஆராய்ச்சி செய்வதற்காக 2018-ஆம் ஆண்டில் சபீர் Miracles Med Solutions Pvt Ltd நிறுவனத்தைத் தொடங்கினார். 20 லட்சம் செலவில் ஒரு ஆய்வகத்தை கட்டினார். ஆய்வுகளின் போது இரத்தப்போக்கு நிறுத்த மருந்துக்கான தேடல் இங்கே நிறைவடைந்தது. மூன்று வருட முயற்சியில், இந்த பொடி செய்வதற்கான முற்றிலும் புதிய சூத்திரத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

Trending News