ஹைப்பர் கிளைசீமியா அதிகமானால் ஆபத்து! கர்ப்பிணிகள் எப்படி பாதுகாப்பாக இருக்கலாம்?

Hyperglycaemia Danger To Pregnant Women: ஹைப்பர் கிளைசீமியா எனப்படும் அதிக இரத்த சர்க்கரை பிரச்சனையானது வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளையும், கர்ப்பகால நீரிழிவு கொண்ட கர்ப்பிணிப் பெண்களையும் பாதிக்கலாம்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 22, 2022, 10:02 AM IST
  • ஹைப்பர் கிளைசீமியாவை எவ்வாறு தடுப்பது
  • வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளையும் பாதிகும் ஹைப்பர் கிளைசீமியா
  • கர்ப்பகால நீரிழிவு கொண்ட கர்ப்பிணிப் பெண்களையும் பாதிக்கும் ஹைப்பர் கிளைசீமியா
ஹைப்பர் கிளைசீமியா அதிகமானால் ஆபத்து! கர்ப்பிணிகள் எப்படி பாதுகாப்பாக இருக்கலாம்? title=

புதுடெல்லி: ஹைப்பர் கிளைசீமியா எனப்படும் அதிக இரத்த சர்க்கரை பிரச்சனையானது வகை 1 நீரிழிவு மற்றும் வகை 2 நீரிழிவு நோயாளிகளையும், கர்ப்பகால நீரிழிவு கொண்ட கர்ப்பிணிப் பெண்களையும் பாதிக்கலாம். இது நீரிழிவு இல்லாதவர்களையும் எப்போதாவது பாதிக்கலாம், ஆனால் பொதுவாக சமீபத்தில் பக்கவாதம் அல்லது மாரடைப்பு அல்லது கடுமையான தொற்று உள்ளவர்கள் போன்ற தீவிர நோய்வாய்ப்பட்டவர்களை மட்டுமே பாதிக்கும் என்பது குறிப்படக்கூடாது.

ஹைப்பர் கிளைசீமியாவை, இரத்தச் சர்க்கரைக் குறைவுடன் குழப்பிக் கொள்ளக்கூடாது, இது ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவு மிகக் குறைவாகக் குறையும் போது ஏற்படுவதாகும். 

ஹைப்பர் கிளைசீமியா சிகிச்சை
ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டு, அத்துடன் ஹைப்பர் கிளைசீமியாவின் அறிகுறிகள் இருந்தால், இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது மிகவும் அவசியமானதாகும்.  

மேலும் படிக்க | உடலின் நச்சுக்களை நீக்கும் ‘சூப்பர்’ பானம் இது தான்!

முதலில் உணவை மாற்றவும். எடுத்துக்காட்டாக, உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் கேக்குகள் அல்லது சர்க்கரை பானங்கள் போன்ற உணவுகளை மறந்தும் கூட சாப்பிட வேண்டாம். அதேபோல, சர்க்கரை இல்லாத திரவங்களை நிறைய குடிக்கவும், இது நீரிழப்பு இருந்தால் உதவும்.

அடிக்கடி உடற்பயிற்சி செய்வது அவசியம். நடைப்பயிற்சி போன்ற மென்மையான, வழக்கமான உடற்பயிற்சி உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம், அதை அடிக்கடி தொடர்வது உடல் எடையைக் குறைக்க உதவும்.

இன்சுலின் பயன்படுத்துபவர்கள், அதன் அளவை சரிசெய்யவும். அதற்கு, தொடர்ந்து இரத்த சர்க்கரை அளவை உன்னிப்பாகக் கண்காணிப்பது அவசியம் ஆகும்.  

மேலும் படிக்க | இதயத்தை பலவீனமாக்கி செயலிழக்கச் செய்யும் தைராய்டு! பாதுகாக்க டிப்ஸ்

உங்கள் இரத்த சர்க்கரை அளவு மீண்டும் கட்டுக்குள் வரும் வரை, மிகவும் தீவிரமான நிலையின் அறிகுறியாக இருக்கும். இரத்த சர்க்கரை அளவு உயர்வால்க இருந்தாலும் பின்வரும் அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.  

வயிற்று வலி 

அதிகம் மூச்சு வாங்குதல்

கண்களை விழிக்க சிரமப்படுவது

தலைவலி, வறண்ட சருமம், பலவீனமான/ துரிதமான இதயத் துடிப்பு 

இந்த அறிகுறிகள் நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் அல்லது ஹைபரோஸ்மோலார் ஹைப்பர் கிளைசெமிக் நிலையின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலையை அலட்சியப்படுத்துவது ஆபத்தில் கொண்டு விடும். எனவே, உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்,  மருத்துவமனையில் கவனிக்கப்பட வேண்டியிருக்கலாம்.

மேலும் படிக்க | நோய்களை ஓட விரட்டும் இந்த ‘மேஜிக்’ மசாலாக்கள் தினசரி உணவில் இருக்கட்டும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News