முருங்கையின் மகத்துவம்! முருங்கையின் அனைத்து பாகங்களும் மாமருந்து!

பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி பயன்படுத்தும் காய்கறிகளின் ஒன்றான முருங்கை, நீரிழிவு, உடல் பருமன், இரத்த அழுத்தம் மற்றும் தோல் உள்ளிட்ட பல நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2022, 02:21 PM IST
  • முருங்கையில் உள்ள பைட்டோ கெமிக்கல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது.
  • உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை முருங்கை பூர்த்தி செய்கிறது.
  • வெளிப்புற தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.
முருங்கையின் மகத்துவம்! முருங்கையின் அனைத்து பாகங்களும் மாமருந்து! title=

முருங்கை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் ஆயுர்வேத மருந்தாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதில் பல வகையான சத்துக்கள் காணப்படுவதால், உடலில் ஆற்றல் நிலை சிறப்பாக பராமரிக்கப்படுகிறது, இறைச்சி மற்றும் மீன் உணவுகளை தவிர்ப்பவர்களுக்கு, முருங்கை ஒரு வரப்பிரசாதம். இதில் புரதச் சத்து அதிகம் உள்ளது. முருகைக்காயின் ஆரோக்கிய பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

முருங்கைக்காயின் ஆரோக்கிய நன்மைகள்

1. முருங்கையில் உள்ள பைட்டோ கெமிக்கல் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இதனுடன், இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. இது வெளிப்புற தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

 2. தற்போதுள்ள கால கட்டத்தில் பெரும்பாலானோருக்கு இரத்த சோகை உள்ளது. முருங்கை உங்கள் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. இதன் காரணமாக, இரத்த சோகையை எதிர்த்துப் போராடுவது எளிது. இதில் உள்ள புரதங்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் அவற்றின் திசுக்களைப் பாதுகாக்கின்றன.

மேலும் படிக்க | அளவுக்கு அதிகமான புரதம் இதயம் - சிறுநீரகத்தை பாதிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்!

3. இதன் இலைகளை அரைத்தும் ஃபேஸ் பேக் செய்யலாம். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவுவதன் மூலம் சருமத்தின் பொலிவை மீட்டுக் கொண்டு வந்து முகத்திற்கு புதிய பொலிவைத் தருகிறது. முருங்கை இலை போட்டு காய்ச்சிய எண்ணெய் முடி வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதனுடன் முடி உதிர்தலில் இருந்து விடுபட உதவுகிறது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் கண்டிப்பாக முருங்கை காயையும் கீரையையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் வயிற்று வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இது வயிற்றின் வளர்சிதை மாற்றத்தை சீர் செய்கிறது, இதனால் உடலில் கூடுதல் கொழுப்பு சேராது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இரட்டை கன்னம் முக அழகை கெடுக்கிறதா... சில ‘எளிய’ பயிற்சிகள் செய்தால் போதும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News