LIC: ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினால் போதும்... வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும்!

முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க விரும்பாமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், எல்ஐசியின் சரல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 24, 2023, 10:40 AM IST
  • LIC சரல் ஓய்வூதியத் திட்டத்தில், வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் பெறலாம்.
  • இந்தத் திட்டத்தில், திட்டம் எடுக்கப்பட்ட உடனேயே ஓய்வூதியம் கிடைக்க தொடங்கும்.
  • LIC சாரல் பென்ஷன் திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது.
LIC: ஒரு முறை ப்ரீமியம் செலுத்தினால் போதும்... வாழ்நாள் முழுவதும் பென்ஷன் கிடைக்கும்! title=

எல்ஐசியின் சரல் பென்ஷன் திட்டம்: முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க விரும்பாமல் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், எல்ஐசியின் சரல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஒருவர் ஓய்வு பெறுகிறார். அதன் பின்னர் வழக்கமான வருமான ஆதாரங்கள் நின்று விடுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், ஓய்வுக்குப் பிந்தைய செலவினங்களுக்காக ஓய்வூதிய நிதியை வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதனால் தான் பெரும்பாலானோர் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். 

ஓய்வூதிய திட்டமிடல்

பென்ஷன் வசதி இல்லாதவர்களுக்கு ஓய்வூதிய திட்டமிடம் மிக அவசியம். ஓய்வூதிய திட்டமிடல்  (Retirement Planning) என்று வரும் போது, ​​LIC (Life Insurance Corporation) என்ற பெயர் கண்டிப்பாக வரும். எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல ஓய்வூதிய திட்டங்களை வழங்குகிறது. இவற்றில் ஒன்று - எல்ஐசி சாரல் பென்ஷன் யோஜனா (LIC Saral Pension Yojana). இது இணைக்கப்படாத, ஒற்றை பிரீமியம், தனிநபர்களுக்கான உடனடி வருடாந்திரத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்

பிரீமியம் செலுத்தும் முறை

எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தை நீங்கள் தனியாகவோ அல்லது உங்கள் மனைவியுடன் சேர்ந்து முதலீடு செய்து கொள்ளலாம். இதில் மொத்தமாக முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஓய்வூதியம் பெறுவீர்கள். திட்டத்தை எடுக்கும் போது வாடிக்கையாளர் ஒரு மொத்த பிரீமியத்தை செலுத்த வேண்டும். இந்தத் திட்டத்தில், அதிக ஓய்வூதியத்தில் தொடங்கி, வாழ்நாள் முழுவதும் ஒரே ஓய்வூதியம் தொடர்ந்து பெறப்படுகிறது. பாலிசி தொடங்கி ஆறு மாதங்களுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்யலாம். எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான குறைந்தபட்ச வயது 40 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது 80 ஆண்டுகள்.

ஓய்வூதியம் பெறுவதற்கான வழிகள்

எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தில் முதலீட்டாளர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர ஓய்வூதியம் பெறலாம். மாதாந்திர ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.1,000, காலாண்டு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.3,000, அரையாண்டு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.6,000 மற்றும் ஆண்டு ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.12,000. இங்கு அதிகபட்ச ஓய்வூதியத் தொகைக்கு வரம்பு இல்லை என்பது சிறப்பு. நீங்கள் 42 வயதாகி, 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூபாய் 12,388 கிடைக்கும். இப்போது நீங்கள் ஓய்வூதியத்தில் அதிக தொகையைப் பெற விரும்பினால், அதற்கேற்ப நீங்கள் அதிக தொகையாக மொத்த பிரீமியத்தை டெபாசிட் செய்யலாம்.

மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்... LIC வழங்கும் அச்சதலான ஜீவன் சாந்தி திட்டம்!

கடன் வசதியும் உண்டு

இத்திட்டத்தில் கடன் வசதியும் உள்ளது. திட்டம் தொடங்கப்பட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். ஏதேனும் நோய்க்கான சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டால், பாலிசியில் டெபாசிட் செய்த பணத்தையும் எடுக்கலாம். பாலிசியை சரண்டர் செய்தால், வாடிக்கையாளர் அடிப்படை விலையில் 95% திரும்பப் பெறுகிறார். சிங்கிள் லைஃப் மற்றும் ஜாயிண்ட் லைஃப் ஆகிய இரண்டிலும் இந்த பாலிசி எடுக்கலாம்.

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 

“லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Life Insurance Corporation of India)” இந்த காப்பீட்டு நிறுவனத்திற்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. பல ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு காப்பீட்டு நிறுவனம். வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க, ஒவ்வொரு நாளும் பல திட்டங்களைக் கொண்டு வருகிறது. அதேசமயம், சில திட்டங்கள் ஏற்கனவே மக்கள் மத்தியில்மிகவும் பிரபலமாக உள்ளன. நிகழ்காலம் வருங்காலம் இரண்டையும் பாதுகாப்பதற்காக, பலர் காப்பீடு அல்லது வேறு வகையான திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்

மேலும் படிக்க | மிகப்பெரிய பலன்களை தரும் மத்திய அரசின் சிறந்த 4 ஓய்வூதியத் திட்டங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News