மத்திய ஊழியர்களுக்கு பம்பர் ஜாக்பாட், 8000 வரை சம்பள உயர்வு

7th Pay Commission: மார்ச் இறுதி வாரத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்தது. இனி வரும் நாட்களில் மத்திய ஊழியர்களுக்கு மேலும் ஒரு பரிசை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 17, 2023, 12:27 PM IST
  • 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
  • மத்திய ஊழியர்களுக்கு மேலும் ஒரு பரிசு.
மத்திய ஊழியர்களுக்கு பம்பர் ஜாக்பாட், 8000 வரை சம்பள உயர்வு title=

அகவிலைப்படி உயர்வு செய்தி: நீங்களும் மத்திய அரசு ஊழியராக இருந்தால் அல்லது உங்கள் குடும்பத்தில் மத்திய ஊழியர் ஒருவர் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த ஆண்டு மார்ச் இறுதி வாரத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்தது. அதன்படி தற்போது வரும் நாட்களில் மத்திய ஊழியர்களுக்கு மேலும் ஒரு பரிசை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குப் பிறகு, மத்திய ஊழியர்களின் சம்பளம் பம்பரமாக உயர்த்தப்படும். மேலும் இம்முறையும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அது 46 சதவீதமாக உயர்த்தப்படும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக கடந்த மார்ச் 2023 இல் 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, அகவிலைப்படி 42 சதவீதமாக அதிகரித்தது. இந்த விலை உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அடுத்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். இரண்டாவது பாதியில் அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) நான்கு சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அகவிலைப்படி 42 சதவீதமாக உள்ளது, ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் அகவிலைப்படி உயர்வுக்கு பிறகு 46 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மகிழ்ச்சியின் உச்சத்தில் அரசு ஊழியர்கள்... அகவிலைப்படியை உயர்த்திய மாநில அரசு!

ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படலாம்
இதற்கிடையில் இரண்டாம் பாதியில் அதாவது ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான அகவிலைப்படி அதிகரிப்பு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு முறையும் செப்டம்பர்-அக்டோபரில் இரண்டாம் பாதியின் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால் இம்முறை அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வளவு சம்பள உயர்வு இருக்கும்?
இரண்டாம் பாதியில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்த்தப்பட்டால், அதற்கேற்ப சம்பளமும் உயரும். உதாரணமாக, ஒரு மத்திய ஊழியர் தற்போது அடிப்படை ஊதியம் ரூ.18,000 பெற்று அதில் 42 சதவீதம் என்ற விகிதத்தில் கணக்கிட்டால் அகவிலைப்படி ரூ.7560 பெறுகிறார். அவரது அகவிலைப்படி 46 சதவீதமாக உயர்ந்தால், பணியாளரின் அகவிலைப்படி ரூ.8,280 ஆக இருக்கும். இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.720 (ஆண்டுக்கு ரூ.8640) அதிகரிக்கும். இதனிடையே இது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், இனி இந்த அசத்தல் பலன் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News