குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: ரூ.9,000 மாத ஓய்வூதியம்? முக்கிய அப்டேட் இதோ

EPS Pension: மார்ச் மாதம், நாடாளுமன்ற நிலைக்குழு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயில் இருந்து உயர்த்த பரிந்துரைத்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 10, 2024, 11:38 AM IST
  • Employees Pension Scheme என்றால் என்ன?
  • EPS ஓய்வூதிய நிதியின் பலன்களைப் பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன?
  • ஓய்வூதிய கணக்கீட்டுற்கான ஊதிய உச்சவரம்பு என்ன?
குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: ரூ.9,000 மாத ஓய்வூதியம்? முக்கிய அப்டேட் இதோ title=

EPS Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ​​வாரியத்தின் பெரிய கூட்டம் இந்த மாதம் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில், பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச ஓய்வூதியம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகின்றது. இபிஎஸ் ஓய்வூதிய நிதியில் (EPS Pension) குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. தற்போது EPFO ​​குறைந்தபட்ச ஓய்வூதியம் 1000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Minimum Pension: சமீபத்திய அப்டேட்

மார்ச் மாதம், நாடாளுமன்ற நிலைக்குழு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை 1000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக உயர்த்த பரிந்துரைத்தது. இருப்பினும், இபிஎஸ் (EPS) ஓய்வூதிய நிதியத்தின் ஓய்வூதியதாரர்கள் (Pensioners), பரிந்துரைக்கப்பட்டுள்ள ரூ.3,000 ஓய்வூதியத் தொகையே மிகவும் குறைவாக உள்ளது என கூறி, ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ.9000 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். 

ஓய்வூதியத் திட்ட வாரிய உறுப்பினர்களும் (Employees Pension Scheme), பாரதிய மஸ்தூர் சங்கமும், பணி ஓய்வுக்கு முன், பணியாளரின் கடைசி ஊதியத்தின்படி ஓய்வூதியத்தை (Pension) நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, ​​கடந்த 5 ஆண்டுகளின் சராசரி சம்பளம் EPS ஓய்வூதிய நிதி இந்த கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. எனினும், தொழிலாளர் அமைச்சகம் அவ்வாறு செய்ய இயலாது என்று தெரிவித்துள்ளது.

Employees Pension Scheme என்றால் என்ன?

EPFO இன் கீழ் வருங்கால வைப்பு நிதியைப் பெறும் அனைத்து சந்தாதாரர்களும் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தில் (Employees Pension Scheme) உறுப்பினர்களாகிறார்கள். இதில், ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளில் பணிபுரிபவர்களுக்கு 58 வயதுக்கு பின் ஓய்வூதியம் கிடைக்கின்றது. இதற்கு, பணியாளர் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றுவது கட்டாயமாகும். 

ஒரு பணியாளர், பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் (EPF) உறுப்பினராகும்போது, ​​அவர் EPS ஓய்வூதிய நிதியத்திலும் உறுப்பினராகிறார். இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) தங்கள் ஊதியத்தில் 12 சதவிகிதத்தை இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. நிறுவனத்தின் பங்களிப்பில், 8.33 சதவீதம் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்திலும் (இபிஎஸ்), 3.67 சதவீதம் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியிலும் (இபிஎஃப்) டெபாசிட் செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க | சம்பள உயர்வுடன் 8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா அப்டேட் விரைவில்

இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியம்

- இபிஎஸ் ஓய்வூதிய நிதிக் கணக்கிற்கான பங்களிப்பு சம்பளத்தில் 8.33 சதவீதம் ஆக உள்ளது.
- ஆனால், தற்போது ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கான அதிகபட்ச ஊதியம் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரமாக உள்ளது.
- இதன் காரணமாக அதிகபட்ச ஓய்வூதியப் பங்கு மாதம் 1250 ரூபாயாக இருக்கும்.
- இதன் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியம் 1000 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 7,500 ரூபாய் வழங்கப்படும். 
- EPS -இன் கூழ், விதவை ஓய்வூதியம், குழந்தைகள் ஓய்வூதியம் என 7 வகையான ஓய்வூதியங்கள் வழங்கப்படிகின்றன.
- ஒரு ஊழியர் பணியில் இருக்கும் போது 58 வயதுக்கு முன் இறந்தால், அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கிடைக்கும்.

குறைந்தபட்ச ஓய்வூதியத்தின் வரம்பை தற்போதுள்ள ரூ.1,000 -இலிருந்து ரூ.9,000 ஆக உயர்த்த வேண்டும் என ஊழியர்கள் கோரி வருகின்றனர்.

EPS ஓய்வூதிய நிதியின் பலன்களைப் பெறுவதற்கான நிபந்தனைகள் என்ன?

- EPS ஓய்வூதிய நிதியின் பலன்களைப் பெற, ஊழியர் EPF இல் உறுப்பினராக இருக்க வேண்டும்.
- இபிஎஃப் சந்தாதாரர்களின் (EPF Subscrobers) பணிக்காலம் குறைந்தது 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- பணியாளருக்கு குறைந்தபட்சம் 58 வயதான பின்னர்தான் ஓய்வூதியம் கிடைக்கும்.
- ஓய்வூதியம் பெறுவதற்கான விருப்பத்தை 50 வயது முடிந்த பிறகும் 58 வயதுக்கு முன்பும் தேர்வு செய்யலாம். 
- ஆனால், அத்தகைய சூழ்நிலையில் வழக்கத்தை விட குறைவான ஓய்வூதியம்தான் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- இதற்கு படிவம் 10டி பூர்த்தி செய்ய வேண்டும்.
- பணியாளர்கள் விரும்பினால், அவர்கள் 58 ஆண்டுகள் முடிந்த பிறகும் EPS ஓய்வூதிய நிதியில் பங்களிக்கலாம்.
- 58 வயது அல்லது 60 வயது முதல் ஓய்வூதியத்தைப் பெறத் தொடங்கலாம்.
- 60 வயதிலிருந்து ஓய்வூதியம் தொடங்கப்பட்டால், ஒத்திவைக்கப்பட்ட 2 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 4% வீதம் ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.
- ஊழியர் இறந்தால், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் பெற உரிமை உண்டு.

ஓய்வூதிய கணக்கீட்டுற்கான ஊதிய உச்சவரம்பு:

இதற்கிடையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை கணக்கிடுவதற்கான சம்பள வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது. செப்டம்பர் 1, 2014 முதல், இபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தைக் கணக்கிடுவதற்கான சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட சம்பள வரம்பு உயர்வுக்கான (Wage Hike Ceiling) ஒப்புதல் கிடைத்தால், ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். இதனால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | PPF Calculator: வெறும் ரூ.416 சேமித்து கோடீஸ்வரராவது எப்படி? முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News