ரயிலில் செல்லும்போது இதில் மிகவும் கவனமாக இருங்கள்... பெரிய அபராதம் விழும்!

Indian Railway Updates: ரயிலில் பயணிக்கும்போது முறையான டிக்கெட் உங்களிடம் இல்லையென்றால் பெரிய அபராதம் மட்டுமின்றி சிறை தண்டனையும் கிடைக்கும் என தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Written by - Sudharsan G | Last Updated : May 21, 2023, 06:38 PM IST
  • டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
  • ரயில் நிலையத்தின் கவுண்டரிலும் டிக்கெட் எடுக்கலாம்.
ரயிலில் செல்லும்போது இதில் மிகவும் கவனமாக இருங்கள்... பெரிய அபராதம் விழும்! title=

Indian Railway Updates: தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். அதே நேரத்தில், ரயில் பயணத்தை வசதியாக மாற்ற, ரயில்வே துறை பல வசதிகளும் மக்களுக்கு செய்து வருகின்றன. நீங்கள் ரயிலில் எங்கும் பயணம் செய்ய விரும்பினால், மக்களுக்கு ரயில் டிக்கெட் தேவை. ரயில்வேயும் இதன் மூலம் சம்பாதிக்கிறது, ஆனால் பல நேரங்களில் மக்கள் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் செய்வதையும் பரவலாக காண முடிகிறது. அத்தகைய சூழ்நிலையில், மக்களுக்கு அபராதமும் விதிக்கப்படலாம்.

ரயில் பயணச்சீட்டு

டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ரயிலில் பயணம் செய்யாமல் பிடிபட்டால், பயணிகளுக்கு அபராதமும் விதிக்கப்படலாம். இதுதவிர, தண்டனை வழங்குவதற்கான விதிமுறையும் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணிக்கவே கூடாது. ரயில்வே சட்டத்தின்கீழ், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்பது குறித்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உஷார்!! ரூ.2000 -ஐ தொடர்ந்து 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் பற்றி வந்த முக்கிய அப்டேட்

அபராதம் 

ரயில் டிக்கெட் இல்லாமல் பயணிப்பது கண்டறியப்பட்டால், ரயில்வே சட்டத்தின் 138ஆவது பிரிவின் கீழ் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும். இதன்கீழ், அவர் பயணித்த தூரம் அல்லது ரயில் புறப்பட்ட நிலையத்திற்கான சாதாரண ஒற்றைக் கட்டணம் மற்றும் கூடுதல் கட்டணம் அதாவது ரூ. 250/- அல்லது ரயில் கட்டணத்திற்கு சமமானது, எது அதிகமோ அது வசூலிக்கப்படும். இது தவிர, பயணிகளை சிறையில் அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தகைய சூழ்நிலையில், எப்போதும் ரயில் டிக்கெட் எடுத்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ரயில் டிக்கெட்டுகளை ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரில் இருந்து எடுக்கலாம். ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் ரயில்வே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது எளிதாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், எப்போதும் செல்லுபடியாகும் ரயில் டிக்கெட் மூலம் மட்டுமே பயணம் செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, ஏற்கனவே பயணம் செய்ய திட்டமிட்டிருந்தவரால் பயணிக்க முடியாமல் வேறு ஒருவர் பயணிக்கும் சூழல் ஏற்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில், ஒருவர், உறுதி செய்யப்பட்ட டிக்கெட் உள்ள மற்றவரின் டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதியை இந்திய ரயில்வே அளிக்கின்றது. 

ஒரு பயணி தனது உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மகன், மகள், கணவன் மற்றும் மனைவி போன்ற அவரது குடும்பத்தில் உள்ள வேறு எந்த உறுப்பினரின் பெயரிலும் மாற்றலாம் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு, ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன், பயணிகள் கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதற்குப் பிறகு, பயணச்சீட்டில் பயணிகளின் பெயர் எடுக்கப்பட்டு, யாருடைய பெயரில் டிக்கெட் மாற்றப்பட்டதோ அந்த உறுப்பினரின் பெயர் போடப்படுகிறது.

மேலும் படிக்க | ரயில்வேயின் அதிரடி சலுகை! ஏசி கோச்சில் இலவசமாக பயணம் செய்யலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News