அரசாங்கத்தின இந்த முக்கிய திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம், புதிய விதி என்ன?

Public Provident Fund: குறைந்த வருவாய் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் சிறுசேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கலாம். நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பான் கார்டுகளை விட அதிகமான ஆதார் அட்டைகளை வைத்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 29, 2023, 09:31 AM IST
  • ஆதார் அட்டை மூலம் முதலீடு செய்யலாம்.
  • சிறுசேமிப்பு திட்டத்தில் விலக்கு அளிப்பதன் நோக்கம்.
  • மக்கள் பான் கார்டுகளை விட அதிகமான ஆதார் அட்டைகளை வைத்துள்ளனர்.
அரசாங்கத்தின இந்த முக்கிய திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம், புதிய விதி என்ன? title=

சிறு சேமிப்புத் திட்டம்: உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அல்லது சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) போன்ற சிறு சேமிப்பு திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்து இருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது. ஏனெனில் இந்த இரண்டு திட்டங்களிலும் அரசு சில மாற்றங்களை செய்து வருகின்றன. அந்த வகையில் ஊடக அறிக்கைகளின்படி, மத்திய அரசின் சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் செயல்முறையை தளர்த்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

ஆதார் அட்டை மூலம் முதலீடு செய்யலாம்
சிறுசேமிப்பு திட்டத்தில் விலக்கு அளிப்பதன் நோக்கம் என்னவென்றால், அரசு திட்டங்களுடன் மேலும் மேலும் மக்களை இணைப்பதே ஆகும். இதன் மூலம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அதிக பயன் பெறுவார்கள். இதனிடையே ஒரு ஆங்கில நாளிதழில் வெளியான அறிக்கையின்படி, பான் கார்டுக்குப் பதிலாக ஆதார் அட்டையைப் பயன்படுத்தி சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று நிதி அமைச்சக அதிகாரி கூறியதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | மக்களே உசார்! ஏப்ரல் 1 முதல் இந்த பொருட்களின் விலை உயருகிறது!

கிராமப்புறங்களில் முதலீடு செய்பவர்கள் பயனடைவார்கள்
இந்த நிலையில் இந்த மாற்றத்தின் மூலம், குறைந்த வருவாய் உள்ள கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் சிறுசேமிப்புத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுவார்கள். மேலும் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பான் கார்டுகளை விட அதிகமான ஆதார் அட்டைகளை வைத்துள்ளனர். அதன்படி மிகக் குறைவான இந்திய மக்கள் அல்லது நகர்ப்புற மக்களிடம் பான் கார்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

க்ளெய்ம் செயல்முறை எளிதாக இருக்கும்
இதனிடையே பிபிஎஃப் மற்றும் சுகன்யா சம்ரித்தி போன்ற திட்டங்களுக்கு, ஜன்தன் கணக்குகளுக்கு கேஒய்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்தார். இது தவிர, முதலீட்டாளரின் மரணம் தொடர்பாக, க்ளெய்ம் தொடர்பான செயல்முறையை எளிதாக்கும் பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது வரை, கோரிக்கையின் சிக்கலான தன்மை காரணமாக, இறந்தவரின் பணம் அவரது வாரிசுகளால் பெறப்படவில்லை. இது தவிர, வேட்புமனு தாக்கல் மேலும் எளிமைப்படுத்தப்படும் என்றுள்ளார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: 4% அகவிலைப்படி உயர்வால் ஊழியர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News