பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதி உதவி வழங்கும் மத்திய அரசு... விண்ணப்பிக்கும் முறை!

நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும், அவர்கள் கல்வியை முறையாக தொடரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று நாடு முழுவதும் பல பெண் குழந்தைகள் மத்திய அரசின் திட்டங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 14, 2023, 06:15 PM IST
  • பெண் குழந்தைகள் கல்வியை பாதியில் கைவிடாமல் முழுமையாக நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்.
  • மகள் பிறந்த பின், ​​அவரது தாய்க்கு, 500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
பெண் குழந்தைகளின் கல்விக்கு நிதி உதவி வழங்கும் மத்திய அரசு... விண்ணப்பிக்கும் முறை! title=

பாலிகா சம்ரிதி யோஜனா: நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும் அவ்வப்போது பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  பெண் குழந்தைகளின் நலவாழ்வுக்காக 'பேட்டி பச்சாவோ-பேட்டி படாவோ' (பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்) என்ற பிரச்சாரம் நாட்டில் நீண்ட காலமாக தற்போதைய மத்திய அரசால் நடத்தப்படுகிறது. இதன் கீழ், நாட்டின் மகள்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், அவர்களின் கல்வியை முறையாக தொடரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏழைப் பிரிவினரின் மகள்கள் தங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்க வேண்டும் என்பதே இந்தத் திட்டங்களின் நோக்கமாகும். பல திட்டங்கள் மூலம் பெண் குழந்தைகள் கல்வியை பாதியில் கைவிடாமல் முழுமையாக நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த வகையில், அரசின் ஒரு லட்சியத் திட்டத்தைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் பெயர் பாலிகா சம்ரிதி யோஜனா (பெண் குழந்தைகள் செழிப்புத் திட்டம்). இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் பல பெண் குழந்தைகள் மத்திய அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்காக பாலிகா சம்ரித்தி யோஜனா தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களின் மகள்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது.

பாலிகா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ்  பெண் குழந்தைகளுக்கு நிதி உதவி கிடைக்கும்

பெண் குழந்தைகளை கல்வியில் ஊக்குவிக்கும் நோக்கில், முதல் வகுப்பிலிருந்தே இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண் சட்டப்பூர்வ வயது வந்தவராக மாறும் வரை. அதுவரை அவர்களை கல்விக்கு இந்த நிதி உதவி உதவும். இத்திட்டத்தில், மகள் பிறந்த பின், ​​அவரது தாய்க்கு, 500 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. உங்கள் வீட்டில் பெண் குழந்தை பிறந்தால், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த திட்டம் குறித்த சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம். பாலிகா சம்ரிதி யோஜனா மூலம் பெண் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும், பிறப்பு முதல் கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும்.

மேலும் படிக்க | மாநில அரசு ஊழியர்களுக்கு ஷாக்: பழைய ஓய்வூதியம் பாரத்தை அதிகரிக்கும்... எச்சரித்த RBI

பாலிகா சம்ரித்தி யோஜனாவில் எவ்வளவு உதவித்தொகை கிடைக்கிறது?

வகுப்பு 1 முதல் 3 வரை - ஆண்டுக்கு ரூ.300

4 ஆம் வகுப்பு - ரூ.500

5 ஆம் வகுப்பு - ரூ.600

6 மற்றும் 7 ஆம் வகுப்புகளுக்கு - ஆண்டுக்கு ரூ.700

8 ஆம் வகுப்புக்கு - ரூ.800

9 மற்றும் 10 ஆம் வகுப்புகளுக்கு - ஆண்டுக்கு ரூ 1000

பாலிகா சம்ரித்தி யோஜனாவிற்கு தேவைப்படும் ஆவணங்கள் 

இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள, உங்களிடம் சில ஆவணங்கள் இருக்க வேண்டும். ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் அடையாள அட்டை, வருமானச் சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழ், வங்கி பாஸ்புக் விவரங்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்கள் இதில் அடங்கும்.

பாலிகா சம்ரித்தி யோஜனாவின் பலன்களை எவ்வாறு பெறுவது?

பாலிகா சம்ரித்தி யோஜனாவிற்கு நீங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆஃப்லைனில், அருகிலுள்ள அங்கன்வாடி மையம் மற்றும் சுகாதார சேவை மையங்களுக்குச் சென்று படிவத்தைப் பெறலாம். கிராமப்புற மற்றும் நகர்ப்புற பயனாளிகளுக்கான படிவங்கள் வேறுபட்டவை என்பதை நினைவில் கொள்ளவும். படிவத்தில் தேவையான அனைத்து தகவல்களும் நிரப்பப்பட வேண்டும்

பாலிகா சம்ரித்தி யோஜனாவுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

1. அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்: பாலிகா சம்ரிதி யோஜனா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சம்பந்தப்பட்ட அரசு போர்ட்டலை அணுகவும்.

2. பதிவு: பெயர், முகவரி மற்றும் தொடர்புத் தகவல் போன்ற விவரங்களை வழங்குவதன் மூலம் கணக்கை உருவாக்கவும்.

3. விண்ணப்பப் படிவம்: முதலில், பெண்ணின் குழந்தை, குடும்பம் மற்றும் வருமான விவரங்கள் பற்றிய சரியான தகவலுடன் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும். இப்போது, ​​அடையாளம், வசிப்பிடம் மற்றும் வருமானம் உட்பட தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

4. சமர்ப்பிப்பு: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கவும். தாமதங்களைத் தவிர்க்க, அனைத்து ஆவணங்களும் சரியாகப் பதிவேற்றப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும்.

5. சரிபார்ப்பு: வழங்கப்பட்ட தகவலை அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். 

6. ஒப்புதல் மற்றும் பலன்கள்: விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதும், நிதி உதவி மற்றும் கல்வி உதவி போன்ற பலன்கள் விண்ணப்பதாரரின் பதிவு செய்யப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

மேலும் படிக்க | UPI Autopay : ஆட்டோ பேமெண்ட் வரம்பு அதிகரிப்பு... எவ்வளவுன்னு தெரியுமா? இதோ முழு விவரம்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News