உஷாராக இருங்கள்!! செக் பவுன்ஸ் விதிகளில் மாற்றம் - உங்கள் மீது சிவில் வழக்கு பாயலாம்.

காசோலை பவுன்ஸ் விதிகளில் மாற்றம் காரணமாக வணிகர்கள் ஏன் கோபப்படுகிறார்கள், ஏன் பிரச்சனை அதிகரிக்கக்கூடும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2020, 09:23 PM IST
உஷாராக இருங்கள்!! செக் பவுன்ஸ் விதிகளில் மாற்றம் - உங்கள் மீது சிவில் வழக்கு பாயலாம். title=

வங்கி செய்திகள்: காசோலை பவுன்ஸ் (Cheque Bounce) பிரச்சினை குறித்து இந்த நாட்களில் கடுமையாக விவாதிக்கப்படுகிறது, ஏனெனில் காசோலை பவுனை கிரிமினல் வழக்கில் (Criminal Case) இருந்து சிவில் வழக்குக்கு (Civil Case) மாற்ற அரசாங்கம் தயாராகி வருகிறது. இது குறித்து ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதியை மாற்றுவது குறித்து வணிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய விதியில், 1988 முதல் கிரிமினல் வழக்குகள் பிரிவில் காசோலை பவுன்ஸ் விவகாரம் வைக்கப்பட்டுள்ளது.

காசோலை பவுன்ஸ் வழக்கை சிவில் வழக்கிற்கு (Civil Case) கொண்டு வருவதற்கான இந்த முயற்சியை வணிகர்கள் ஆட்சேபித்துள்ளனர். இதுக்குறித்து பேசிய யுசிபிஎம்ஏ தலைவர் டி.எஸ். சாவ்லா, காசோலை தோல்வியுற்றால் கிரிமினல் வழக்கு விதிக்கப்படுகிறது. 

ALSO READ |  வாட்ஸ் ஆப் இமெயிலில் கூட சம்மன் வரும்.. இனி எங்கே போனாலும் தப்பிக்க முடியாது..!!

இது தொடர்பான சட்டம் அபராதம் முதல் சிறைவாசம் வரை தண்டனை தரப்படுகிறது. இதனால் காசோலை பயன்படுத்துவோர்களின் மத்தியில் பயம் இருந்தது. மோசடியில் குறைப்பு ஏற்பட்டது. ஆனால் இந்த குற்றத்தை ஒரு சிவில் வழக்கில் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வரும் புதிய திட்டத்தை நிறுத்த வேண்டும். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிவில் நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளது. ஒருவேலை காசோலை பவுன்ஸ் வழக்கை சிவில் வழக்கிற்கு கொண்டு வந்தால் ​​மக்களின் பயம் முடிவுக்கு வந்து மோசடி கணிசமாக அதிகரிக்கும். ஏனென்றால் இந்த வழக்குகளின் மீது தீர்ப்பு வழங்க கால அவகாசம் ஆகும் எனவும் கூறினார்.

விதிகள் மாற்றப்படுவதால், வங்கிகள் மற்றும் என்.பி.எஃப்.சி நிறுவனங்களும் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களில், இன்றும் காசோலையின் முக்கியத்துவம் அதிகமாக உள்ளது. இந்த மாற்றம் வணிகத்தின் மீதான நம்பிக்கையை முடிவுக்குக் கொண்டுவரும் என்று வணிகர்கள் கூறுகின்றனர். 5 லட்சம் காசோலை பவுன்ஸ் ஏற்பட்டால், அவர் ஐந்து ஆண்டுகள் ஒரு வழக்கை எதிர்த்துப் போராடுவாரா? அல்லது தனது தொழிலை நிர்வகிப்பாரா? என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், தொழிலதிபரின் கவனம் வணிகத்தில் இருக்காது.

ALSO READ | ATM செல்ல தேவையில்லை; இனி வீட்டில் இருந்தபடியே பணம் பெறலாம்... எப்படி?

ஒரு மூத்த வழக்கறிஞர் கூறுகையில், நீங்கள் அதை குற்றவியல் பிரிவில் இருந்து சிவில் வகைக்கு கொண்டு வந்தால், நீதிமன்றத்தின் சுமை குறையும் என்று நான் நினைக்கவில்லை. காசோலை பவுன்ஸ் என்றால், மாற்றத்தின் விளைவு சட்ட பார்வையில் இருந்து எதிர்மறையாக இருக்கும். காசோலை பவுன்ஸ் தொடர்பாக விதிகள் மாற்றப்பட்டால், ஒரு பெரிய சிக்கல் எழும். காரணம் அவர்கள் இன்றே சிறைக்குச் செல்வோமோ என்ற பயம் நீங்கிவிடும்.

Trending News