Sri Lankan New President: இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே

Sri Lankan New President Ranil Wickramasinghe: இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 20, 2022, 01:22 PM IST
  • மும்முனை போட்டியில் வெற்றிபெற்றார் ரணில் விக்ரமசிங்க
  • இலங்கையின் புதிய அதிபரானார் ரணில் விக்ரமசிங்க
  • மிகப் பெரிய சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும்: ரணில் விக்ரமசிங்க பேட்டி
Sri Lankan New President: இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே title=

கொழும்பு: இலங்கையின் 8வது அதிபராக ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த செய்தியை இலங்கை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க அறிவித்தார். இலங்கையில், பதவியில் இருந்த அதிபர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறி, பதவி விலகிய பிறகு, நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. ரணில் விக்ரமசிங்கவிற்கு 134 வாக்குகளும், டளஸ் அழகபெருமவிற்கு 82 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்கவிற்கு 3 வாக்குகளும் பதிவாகின.

முன்னதாக, இலங்கை அதிபராக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டில் ஏற்பட்ட தொடர் போராட்டங்களில் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். சிங்கப்பூரில் இருந்து, கடந்த 14ம் தேதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார்.

இலங்கை அரசியலமைப்புச் சட்டங்களின்படி, தற்காலிக அதிபராக  கடந்த 15ம் தேதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் அவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கவர். ஒற்றை எம்.பி.யாக இருந்தாலும், தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்று அதிபராகியிருக்கிறார் ரணில் விக்ரமசிங்க.  

மேலும் படிக்க |  இலங்கையில் பெரும் பதற்றம்; ரணில் வீடும் முற்றுகை 

இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமசிங்க, 2024 நவம்பர் மாதம் வரை பதவியில் தொடர்வார். 225 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஆளும் SLPP கட்சி ஆதிக்கம் செலுத்துகிறது, இது கிட்டத்தட்ட 100 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 

புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது, எமக்கு முன்னால் மிகப்பெரிய சவால்கள் உள்ளன என இலங்கையின் புதிய அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ரியாட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில், 2024 நவம்பர் மாதம் வரை அதிபராக பதவி வகிப்பார்.  

மேலும் படிக்க | இலங்கையின் புதிய அதிபர் யார்? மும்முனைப் போட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சில உறுப்பினர்கள் என முக்கிய கட்சிகள் டளஸ் அழகபெருமவிற்கு ஆதரவை வழங்கியிருந்தாலும்,  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சில தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டார். பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும, அனுர குமார திசநாயகே ஆகிய மூவர் போட்டியிட்ட நிலையில், ரணில் விக்கிரமசிங்கவும் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

மேலும் படிக்க | இலங்கையில் மீண்டும் அவரச நிலை: பிரகடனம் செய்தார் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கே

1978 முதல், இலங்கையின் வரலாற்றில், அதிபரை தேர்ந்தெடுப்பதற்கு நாடாளுமன்றம் வாக்களித்ததில்லை.அதன்பிறகு ரணில் விக்ரமசிங்க இன்று (2022, ஜூலை 20), நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1982, 1988, 1994, 1999, 2005, 2010, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் மக்களினால் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1993 ஆம் ஆண்டு அதிபர் ரணசிங்க பிரேமதாச படுகொலை செய்யப்பட்ட போது மட்டுமே, அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது. அப்போது, பிரேமதாசவின் பதவிக் காலத்தை நிறைவு செய்வதற்காக டி.பி.விஜேதுங்க நாடாளுமன்றத்தால் ஒருமனதாக அங்கீகரிக்கப்பட்டார்.

மேலும் படிக்க | அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட மக்கள்; தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News