இலங்கையில் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது!

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்!

Last Updated : Jan 8, 2019, 09:12 AM IST
இலங்கையில் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது! title=

எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்!

நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடன் இருந்து ஒரு படகு இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்டு அங்கு விசாரணைகள் மற்றும் பரிசோதனைகள் இடம் பெற்ற பின் நேற்று மாலை வடமாகாண நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஊர்காவற்துறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மேலும் நான்கு மீன்வர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் தமிழகத்தின் புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் வடமாகாண நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News