ஒரு கடினமான கட்டத்தை கடந்து வரும் ஆட்டோமொபைல் துறையை உயர்த்துவதற்கான வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை குறித்த முடிவை மத்திய அமைச்சரவை விரைவில் கொண்டு வரக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
பிரதமர் மோடி தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பரோடா (பாங்க் ஆப் பரோடா) வங்கியுடன், விஜயா வங்கி மற்றும் தேனா வங்கியை இணைக்கும் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவையில் ரூ. 3000 கோடி மதிப்பிலான எதிரி சொத்துகளின் பங்குகளை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2018 மார்ச் மாதத்தில் முடிவடைந்த 4வது காலாண்டில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள IDBI வங்கியின் பங்குகளை LIC வாங்குதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதலை தந்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு பிள்ளைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்கக்கூடாது என்றும், அவர்களை ஆல் பாஸ் பெறச்செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த சட்டதின் படி எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் ஆல் பாஸ் அளிக்கப்பட்டு அடுத்த வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
இதற்கிடையே, இந்த ஆல் பாஸ் முறையால் கல்வித்திறன் பாதிக்கப்படுவதாக மாநிலங்களும், கல்வியாளர்களும் முறையிட்டனர். இதனால், ஆல் பாஸ் முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. இதில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கவும் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட உள்ளது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். இந்த அகவிலைப்படி உயர்வு இந்த வருட ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து கணக்கிட்டு ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.