முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று பொறுப்பேற்றனர். முதல்வர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் கவர்னர். பதவி பிரமாணம் முடிந்தவுடன் நேராக பழனிச்சாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் முன்னால் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் இன்று அழைத்த பிறகு, அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் செங்கோட்டையன் பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் பதவி அப்படியே நீடிக்கின்றனர்.
சசிகலா விருப்பத்தின்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அரியணையில் அமர்ந்துள்ளார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு காலக்கெடு 15 நாட்கள் விதிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டியை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை கலைக்கப்படும். தனது பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிப்பாரா? என்று இனிவரும் நாட்களில் தான் தெரியும்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க கவர்னர் வித்யாசாகர் இன்று அழைத்த பிறகு, அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 31 பேர் கொண்ட தமிழக அமைச்சரவை இன்று பொறுப்பேற்றனர்.
முதல்வர் உள்ளிட்ட தமிழக அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் கவர்னர்.
முதலில் 8 அமைச்சர்கள் பதவி ஏற்றார். பிறகு அடுத்த 8 அமைச்சர்கள் பதவி ஏற்றார். அதன் பின் 7 பேர் இறுதியாக 7 அமைச்சர்கள் பதவி ஏற்றனர்.
கவர்னர் முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்றார். கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்த்தார்.
சேலம் மாவட்ட சிலுவம்பாளையத்தில் பிறந்தவர். விவசாய குடும்பத்தில் பிறந்து முதல்வர் நாற்காலியில் அமர உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் பயணத்தை தெரிந்து கொள்வோம்.
அதிமுக சட்டசபைக்குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு 62 வயதாகிறது. சொந்த ஊர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம். தந்தை பெயர் கருப்ப கவுண்டர். தாயார் தவுசாயம்மாள். மனைவி பெயர் ராதா. மகன் நிதின் குமார் பி.இ. படித்து உள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கருப்பகவுண்டர்-தவுசாயம்மாள் தம்பதியரின் கடைக்குட்டியாக பிறந்தவர் பழனிச்சாமி.
சசிகலா ஆதரவு எம். எல்.ஏ.க்கள் கூவத்தூர் விடுதியில் 10 நாட்களாக தங்கி உள்ளனர். எம்.பி.க்கள், அமைச்சர்கள், தலைவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் முகாமிட்டு இருந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.