ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. ரஷ்யப் படைகள் கியேவ் மற்றும் மரியுபோல் நகரங்கள் மீது குண்டுவீசி வருகின்றன.
உக்ரைனின் கார்கிவ் நகரில் இருந்து மைனஸ் 2 டிகிரி குளிரில் பல கிலோமீட்டர் தூரம் நடந்து எல்லையை கடக்க நேரிட்டதாக மயிலாடுதுறையை சேர்ந்த மாணவி தனது பயணத்தை விவரித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே 2 வாரங்களாக போர் நீடித்து வரும் நிலையில் கோவையை சேர்ந்த இளைஞர் சாய் நிகேஷ் உக்ரைன் துணை ராணுவப்படையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசியில் உரையாடி, இந்தியர்களை வெளியேற்றுவதற்கு உதவியதற்கு நன்றி தெரிவித்தார்.
ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின்னர் ஒரு வாரத்தில் பத்து லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மோதல்கள் உடனடியாக முடிவுக்கு வராத பட்சத்தில் மேலும் லட்சக்கணக்கானோர் தப்பிச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் ஐ.நா எச்சரித்துள்ளது. செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் நெருக்கடி குறித்த ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.