சென்னையில் ஐபில் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாசாலை, சேப்பாக்கம் மற்றும் மைதானம் அருகே போராட்டம் நடத்தியவர்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற தகுதி சுற்று 2 போட்டியில் கொல்கத்தா அணி குவாலிபயர் 2-க்கு முன்னேறியது.
நேற்று இரவு நடந்த பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில், ஐதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி கேப்டன் கம்பீர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்தது.
49 ரன்களுக்குச் சுருண்டு கோலி தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா அணிக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்தது.
ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.3 ஓவர்களில் 131 ரன்னில் சுருண்டது. சுனில்நரின் அதிகபட்சமாக 17 பந்தில் 34 ரன் (6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தார். யசுவேந்திர சகால் 3 விக்கெட்டும் பவான் நெகி, டைமல் மில்ஸ் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மற்றும் குஜராத் லயன்ஸும் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதில், கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா.
ஆனால் குஜராத் அணியோ இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி, வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை பந்தாடிய கொல்கத்தா அணி, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருந்து கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது.
ஐபிஎல் தொடரின் நேற்று நடந்த 2-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. கொல்கத்தாவிற்கு எதிரான இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
முதலில் களம் இறங்கிய காம்பீர் 4.2 ஓவரில் 44 ரன்களாக இருக்கும்போது 13 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த உத்தப்பா 4 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் லின் 32 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த மணீஷ் பாண்டே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, யூசுப் பதான் (6), சூர்யகுமார் யாதவ் (17) சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.