பழனி பாதயாத்திரை செல்வதற்காக 40 நாள் செருப்பு போடாமல் இருப்பார்கள் என்றும், அதை அண்ணாமலை கடைப்பிடித்து வருகிறார் என்றும் தெரிவித்த அமைச்சர் ரகுபதி, திமுகவை அகற்றுவேன் என்று கூறினால், அவர் வாழ்நாள் முழுதும் செருப்பு அணிய முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத திமுக அரசை கண்டித்து நாளை முதல் தங்களது வீடுகளின் முன்பு நின்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
ஆதிதிராவிட, பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடப் பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மேலூர் டங்ஸ்டன் பிரச்சினையில் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் கபட நாடகத்தைத் தோலுரித்துக் காட்டியது இன்று நிரூபணம் ஆகியுள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Minister Sivasankar | துணை முதலமைச்சர், இட ஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸூக்கு, அமைச்சர் சிவசங்கர் நறுக்கென பதில் அறிக்கை கொடுத்து கேள்விகளையும் முன்வைத்துள்ளார்.
Tamil Nadu Latest News Updates: தமிழ்நாட்டுக்கு பெரியாரும் வேண்டும், பெருமாளும் வேண்டும் என மதிமுக மக்களவை உறுப்பினர் துரை வைகோ மீண்டும் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்லாவரம் அருகே பொழிச்சலூர் ஊராட்சியில் மாற்றுத்திறனாளியை கோவிலுக்குள் ஏன் வந்தாய் என ஜாதி பெயரை சொல்லி இழிவாக பேசி நெஞ்சில் எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் தான் இந்த கொடூரத்தை செய்துள்ளார்.
2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வி.சி.கவுக்கு 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு பேசியிருப்பது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து இருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்றும், மாநில அரசு முழுமையாக போதை பொருள்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
கேராளவில் தமிழக கழிவுகளை எடுத்து சென்று கொட்டினால் அந்த மாநிலத்தின் மக்கள் அதை எதிர்ப்பார்கள். நீ கடவுளின் தேசம் என்றால் நாங்க கண்றாவி தேசமா? என சீமான் கேள்வி.
கள்ளக்குறிச்சியில் கொழுத்துப் போய் கள்ளச்சாராயம் குடித்துச் செத்தனர் என்றும், எவன் செத்தாலும் நாங்கள்தான் அழவேண்டும் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அம்பேத்கரைத் தரம் தாழ்ந்து அவதூறாகப் பேசி இழிவுபடுத்தியுள்ளார் என அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.