அதிர்ச்சி கொடுத்த WhatsApp, 22 லட்சம் கணக்குகள் Ban

22 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை WhatsApp தடை செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 2, 2021, 01:22 PM IST
அதிர்ச்சி கொடுத்த WhatsApp, 22 லட்சம் கணக்குகள் Ban title=

புதுடெல்லி: கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் WhatsApp, அவ்வப்போது பல புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. ஆனால் இந்த முறை வாட்ஸ்அப்  22 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை தடை செய்துள்ளது. இதை வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. விதிகளை மீறியதால் 22 லட்சம் பயனர்களின் கணக்கு தடை செய்யப்பட்டது. பிற பயனர்களின் புகார்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முழு விவரத்தை இங்கே காண்போம்.

பயனாளர்களின் பாதுகாப்பை கருதி வாட்ஸ்அப் (WhatsApp) சிலரின் கணக்குகளை தடை செய்துள்ளது. அதன்படி சுமார் 22 லட்சத்து 9 ஆயிரம் கணக்குகள் தடை செய்யப்பட்டதாக வாட்ஸ்அப்பின் அறிக்கையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் கூறுகையில், 'பயனர்களிடம் இருந்து புகார்கள் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துஷ்பிரயோகத்தை தடுக்கவே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்தில் “account support, ban appeal, other support மற்றும் product support and safety” ஆகிய பிரிவுகளில் நிறுவனம் புகார்களைப் பெற்றது. 

இந்த முறையில் வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்பட்டுள்ளது
WhatsApp கணக்குகள் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடை செய்யப்பட்டுள்ளன. நிரந்தரம் என்றால் உங்கள் கணக்கு என்றென்றும் தடைசெய்யப்படும். அதே நேரத்தில், தற்காலிகமானது மதிப்பாய்வுக்குப் பிறகு கணக்கை மறுதொடக்கம் செய்யலாம்.

Also Read | மாறுகிறது Facebook பெயர்! விரைவில் மார்க் ஜுக்கெர்பெர்க் அறிவிக்க உள்ளதாக தகவல்

ஸ்பேம் செய்திகளை அனுப்ப வேண்டாம்
மக்கள் ஆயிரக்கணக்கான ஸ்பேம் செய்திகளை அனுப்புவது அடிக்கடி காணப்படுகிறது. யாராவது ஸ்பேம் செய்தியை அனுப்பினால், அது புகாரளிக்கப்பட்டால், அவர்களின் எண் கண்காணிக்கப்பட்டு உரிய நேரத்தில் தடை செய்யப்படும். அதே நேரத்தில், நீங்கள் வாட்ஸ்அப் மூலம் ஒருவருக்கு ஆபாச உள்ளடக்கத்தை அனுப்பினால், அந்த கணக்கு உடனடியாகத் பிளாக் செய்யப்படும். 

மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்த வேண்டாம்
நீங்கள் வாட்ஸ்அப்பில் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளைப் பயன்படுத்தினால், உடனடியாக அவற்றை நிறுத்துங்கள். ஏனெனில் இதன் மூலம் உங்கள் கணக்கு தடை செய்யப்படலாம். ஆப் ஸ்டோரியில் பல மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் உள்ளன. இவை பயனர்களின் தனியுரிமையை ஆபத்தில் ஆழ்த்துகின்றன. இங்கு மூன்றாம் தரப்பு செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பயன்பாடு ஒவ்வொரு மாதமும் ஸ்கேனிங் செய்கிறது. மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்துபவர் பிடிபட்டால், அவர்களது வாட்ஸ்அப் தடை செய்யப்படும். ஆனால் இது ஒரு தற்காலிக தடை. அதாவது, மதிப்பாய்வுக்குப் பிறகு, உங்கள் கணக்கை மீண்டும் செயல்படுத்தலாம்.

Also Read | ரகசியமாக அறிமுகம் ஆனது Vivo-வின் புதிய போன் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News