RAISE 2020 | AI-ல் உலகத் தலைவராவதற்கு இந்தியாவிற்கு வாய்ப்பு - முகேஷ் அம்பானி

மேக் இன் இந்தியா மூலம், நாட்டிலேயே டிஜிட்டல் சாதனங்கள், சென்சார்கள் மற்றும் பிற சாதனங்களின் மலிவு உற்பத்தி திறனை உருவாக்குகிறோம்.

Last Updated : Oct 6, 2020, 08:05 AM IST
RAISE 2020 | AI-ல் உலகத் தலைவராவதற்கு இந்தியாவிற்கு வாய்ப்பு - முகேஷ் அம்பானி title=

மேக் இன் இந்தியா மூலம், நாட்டிலேயே டிஜிட்டல் சாதனங்கள், சென்சார்கள் மற்றும் பிற சாதனங்களின் மலிவு உற்பத்தி திறனை உருவாக்குகிறோம்.

சமூக வலுவூட்டலுக்கு பொறுப்பான செயற்கை நுண்ணறிவு (Global AI Summit RAISE 2020) இல் நாட்டின் மற்றும் உலகின் பல வீரர்கள் பங்கேற்றனர். அக்டோபர் 9 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) திறந்து வைத்தார்.

செயற்கை நுண்ணறிவு, RAISE 2020 என்ற பெயரில் சர்வதேச மெய்நிகர் தொழில்நுட்ப உச்சி மாநாடு இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக சமூக மாற்றம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க 5 நாட்கள் நடைபெறும். இந்த மாநாட்டின் தொடக்க நாளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலமாக பங்கேற்றார். தொழில்முனைவோர்கள், செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதில் பேசிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani), செயற்கை நுண்ணறிவுத்துறையில் வளர்ச்சி பெற தரவுகளே அடிப்படைத் தேவை என்றார்.

மாநாட்டில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, இந்த நேரத்தில் செயற்கைத் துறையில் உலகத் தலைவர்களாக நாம் ஆகக்கூடிய அனைத்து வழிகளும் இந்தியாவில் உள்ளன என்று கூறினார். 

செயற்கை நுண்ணறிவு (AI) க்கான மூலப்பொருள் தரவு என்று அவர் கூறினார். இது தேசத்தின் முக்கியமான சொத்து. செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த இந்தியாவின் இளைஞர்கள், தொழில் மற்றும் முழு நாடும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார். நாட்டை வலுவாகவும் புதிய இந்தியாவாகவும் மாற்றும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரலையும் செயல்படுத்த நாடு தயாராக உள்ளது.

ALSO READ | பந்தில் எச்சிலை தடவிய விராட் கோலி; சச்சின் டெண்டுல்கரின் ரியாக்‌ஷன் - Watch

முகேஷ் அம்பானி கூறுகையில், மேக் இன் இந்தியா (Make in India) மூலம், நாட்டிலேயே டிஜிட்டல் சாதனங்கள், சென்சார்கள் மற்றும் பிற சாதனங்களின் மலிவு உற்பத்தி திறனை உருவாக்குகிறோம். இது மட்டுமல்லாமல், உலகத் தரம் வாய்ந்த தரவு மையங்களின் உதவியுடன், கணினி சக்தியில் இந்தியா உலகத்தை வழிநடத்துகிறது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உற்பத்தித்திறன் ஊக்குவிக்கப்படுகிறது.

தரவுகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு திட்டம் கொண்டுவர வேண்டும். இந்தியாவில் வளர்ந்துவரும் தகவல் மையங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் முன்னெடுப்புகள் நாட்டில் டிஜிட்டல் புரட்சியை வளர்த்தெடுத்தது. நுண்ணறிவு தரவுகள்தான் டிஜிட்டல் மூலதனம். 1.3 பில்லியன் இந்தியர்களை டிஜிட்டலாக தொழில்நுட்பத்தில் வளர்த்தெடுப்பதுதான் வேகமான வளர்ச்சி, சிறப்பான வாய்ப்புகளை உருவாக்கும். கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து மீண்டெழும் சக்தி இந்தியாவுக்கு உள்ளது’ என்று தெரிவித்தார்.

Trending News