திமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் - ஜெயக்குமார் விமர்சனம்!

திமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Sep 4, 2019, 08:44 AM IST
திமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் - ஜெயக்குமார் விமர்சனம்! title=

திமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!!

தமிழக அரசியலில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை ஜோக்கர் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் விமர்சனம் அளித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை சார்பில், சென்னை  பாரிமுனையில் உள்ள குறளக வளாகத்தில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டது. இதனை அமைச்சர்கள்  ஜெயக்குமாரும், பாஸ்கரனும் தொடக்கி வைத்தனர். 

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார் கூறுகையில்; கதர் கிராம தொழில்வாரியம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகமாக நுகர்கின்ற ஒரு பழக்கம் பொதுமக்களிடையே ஏற்பட்டால் நிச்சயமாக கிராமப்புற பொருளாதாரம் மேம்படும். கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை எதிர்த்து எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் அ.தி.மு.க. கட்சி. தி.மு.க. ஒரு தீய சக்தி என்று உலகிற்கு அவர் அடையாளம் காட்டினார். 

எனவே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் ஒருபோதும் தி.மு.க.விற்கு போகமாட்டார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வில் இருந்து யாராவது வருவார்களா? என்று கதவை திறந்து வைத்து கொண்டு, வருபவர்களுக்கு பதவிகளை கொடுக்க தயாராக இருக்கிறார். இது சாக்லெட்டை காட்டி குழந்தைகளை ஏமாற்றும் கதையாகத்தான் இருக்கிறது.

அமமுகவில் இருந்து வேண்டுமானால் சிலர் திமுகவுக்கு செல்லலாம் என்றும், ஆனால்  அதிமுகவில் இருந்து யாரும் திமுகவுக்கு செல்லமாட்டார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுகவை விழுங்க திமுக முயல்வதாகக் குற்றம் சாட்டிய ஜெயக்குமார், திமுக திமிங்கலம் என்றால், அதனிடம் மாட்டாத விலாங்கு மீன் அதிமுக என கூறினார். 

மேலும், பதவி கொடுத்து இழுக்க பார்க்கும் மு.க.ஸ்டாலினின் ஆசை நப்பாசையாகத்தான் முடியும். ஆன்லைனில் சினிமா டிக்கெட் விற்பது தவறு அல்ல. அதனால், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் அரசு பாதுகாக்கும் என வர் கூறினார். 

 

Trending News