நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அவமானப்படுத்தியுள்ளார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

புகழ் பெற்ற நீலகிரியை  கூகுலில் தேடினால் 2-ஜி ஊழல்தான்  வருகிறது. நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அந்த அளவிற்கு அவமானப்படுத்தியுள்ளார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் பேட்டி.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2024, 12:26 PM IST
  • பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியினர் சந்திப்பு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
  • நீலகிரி பாரளுமன்ற பாஜக வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்தார்.
  • கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து எல்.முருகன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அவமானப்படுத்தியுள்ளார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் title=

புகழ் பெற்ற நீலகிரியை  கூகுலில் தேடினால் 2-ஜி ஊழல்தான்  வருகிறது என்றும் நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அந்த அளவிற்கு அவமானப்படுத்தியுள்ளார் என்றும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியினர் சந்திப்பு கூட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதையடுத்து, மத்திய இணையமைச்சரும், நீலகிரி பாரளுமன்ற பாஜக வேட்பாளருமான எல்.முருகன் மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்தார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க வின் கூட்டணி கட்சிகளான பா.ம.க, ஐ.ஜே.கே, அமமுக, ஓபிஎஸ் அணி ஆகியோரின் உள்ளூர் பிரமுகர்களை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அரங்கில் சந்தித்து  எல்.முருகன் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன், "நேற்று ஊட்டியில் வேட்புமனு தாக்கல் செய்த போது நடந்த அசௌகரியமான காரியத்துக்கு காவல்துறையின் மெத்தன போக்கும், சரியாக திட்டமிடாதலுமே காரணம். பிரதமர் நரேந்திர மோடி நீலகிரியில் பிரச்சாரம் செய்வதற்கு கோவை மற்றும் நீலகிரிக்கு  வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று அதை அதிகப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிகூடங்கள், அங்கன்வாடி போன்ற மக்களின் அடிப்படை வசதிகள் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துள்ளனர்." என்று கூறினார்.

மேலும் படிக்க | 10ஆம் பொதுத்தேர்வு இன்று தொடக்கம்! மாணவர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து..

"போதை பொருள் சப்ளை ஒரு பெரிய விஷயமாக உள்ளது. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய போதை கடத்தல் வழக்கில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் சிக்கி இருக்கிறார்கள். உலகின் சுற்றுலா தளங்களில் பேர் போன நீலகிரியை இன்று கூகுலில் தட்டினால் 2-ஜி என்றுதான் வருகிறது. அந்த அளவு  இத்தொகுதி மக்களை தற்போதைய எம்.பி அவமானப்படுத்தியுள்ளார். 2ஜி வழக்கில் குற்றம் நடந்துள்ளது, முழு விசாரணை தேவை என  தற்போது டெல்லி உயர் நீதிமன்றதால்  ஏற்கப்பட்டுள்ளது. அதோடு மக்களின் இறை நம்பிக்கைகளை, பெண்களை, பட்டியலின அருந்ததியர் மக்களை தரைக்குறைவாக பேசுவதுதான் இவரது வேலையாக இருக்கிறது. இந்திய அரசியல் சாசனத்தையும் அம்பேத்கரையும் பா.ஜ.க மதிக்கிறது. என் மண் என் மக்கள் யாத்திரை மற்றும் பிரதமரின் தமிழக வருகைக்கு பின்னர் தமிழகத்தில் பாஜக வலுவான கூட்டணியாக உள்ளது" என்று அவர் மேலும் டெஹ்ரிவித்தார்.

மேலும் படிக்க | 6 பவுன் தங்கச் சங்கிலி பரிசு கொடுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்! அதிர்ஷ்டம் யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News