வீரமரணமடைந்த ராணுவ குடும்பத்திற்கு நிதியுதவி: தமிழக அரசு

Last Updated : Aug 14, 2017, 12:00 PM IST
வீரமரணமடைந்த ராணுவ குடும்பத்திற்கு நிதியுதவி: தமிழக அரசு title=

எல்லையில் தமிழக ராணுவ வீரர் மரணம் அடைந்த குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. அவர்களின் முயற்சியை முறியடிக்க இந்திய ராணுவ வீரர்கள் கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

காஷ்மீரில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் இளையராஜா வீரமரணம் அடைந்தார்.

அவர் சிவகங்கை மாவட்டம் கண்டனியைச் சேர்ந்தவர். இவருடன் சுமேத் வாமன் என்ற ராணுவ வீரரும் மரணமடைந்துள்ளார். 

இந்நிலையில் உயிரிழந்த தமிழக வீரரின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Trending News