+2 தேர்வு முடிவுகள் வெளியாது- எஸ்எம்எஸ் மூலம் மார்க்!

Last Updated : May 12, 2017, 01:22 PM IST
+2 தேர்வு முடிவுகள் வெளியாது- எஸ்எம்எஸ் மூலம் மார்க்! title=

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. முடிவு வெளியான, 10 நிமிடங்களில், மாணவர்களின் மொபைல் போனுக்கு, மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்.,சில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் மொத்தம் 9 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளை எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ, மாணவியர் இணையதளம் வழியாக பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக மூன்று இணையதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.tnresults.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் பிளஸ்-2 முடிவுகளை பார்க்கலாம்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர். அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும், தொழில் பாடப் பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்களாக 34 ஆயிரத்து 868 பேரும் எழுதினர்.

பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அவர், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது.

Trending News