பொதுத் தேர்வு ரத்து என்ற முடிவில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்: ஸ்டாலின்!

5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்ற உத்தரவில் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்!!

Last Updated : Feb 5, 2020, 06:57 AM IST
பொதுத் தேர்வு ரத்து என்ற முடிவில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்: ஸ்டாலின்! title=

5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்ற உத்தரவில் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்!!

தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், அதற்கேற்ற வகையில், சிறப்பு வகுப்புகளை நடத்தி, மாணவர்களை தயார்படுத்தி வந்தன. அதேவேளையில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று முடிந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், 5ஆவது மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு நடத்துவதாக, கடந்த செப்டம்பர் மாதம் 13 ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற கோரிக்கைகளை, தமிழ்நாடு அரசு கவனமுடன் பரிசீலித்து, 5ஆவது மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு அரசாணையை ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே உள்ள பழைய நடைமுறையே தொடரும் என்றும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அறிவிப்பை வெளியிட்டார். 

இதை தொடர்ந்து 5,8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து என்ற உத்தரவில் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது.... "5,  8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க தொடக்கம் முதலே வலியுறுத்தி வந்தது. அதற்குச் செவி மடுக்க மறுத்த அதிமுக அரசு, தற்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டு ரத்து செய்துள்ளது.

இதிலேனும் அதிமுக அரசு உறுதி காட்டுவதோடு #NewEducationPolicy -யையும் எதிர்க்க வேண்டும்'" என கோரிக்கை விடுத்துள்ளார்.  

 

Trending News