களைகட்டும் தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு: 900 காளைகள் பங்கேற்பு!!

தஞ்சையை அடுத்த திருக்கானூர் பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி உள்ளது. இதில் 900 காளைகள் பங்கேற்றுள்ளனர்.   

Last Updated : Feb 4, 2018, 10:37 AM IST
களைகட்டும் தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு: 900 காளைகள் பங்கேற்பு!! title=

தஞ்சை மாவட்டம் திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கையை சேர்ந்த 900 காளைகள் பங்கேற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் அமைச்சர் துரைக்கண்ணு கொடியசைத்து துவங்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கியதும், காளைகள் துள்ளிகுதித்து சீறிப்பாய்ந்தன. அதன் பிறகு, வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்து வருகிறது.

அவற்றை பிடிக்க மாடுபிடி வீரர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதில் 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கியும் வருகிறார்கள்.

பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் அடிபடாமல் இருப்பதற்காக தேங்காய் நார்கள் போடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ்களும், மொபைல் ஆம்புலன்ஸ்கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Trending News