மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகள்! அதிர்ச்சிப் பின்னணி!

தஞ்சாவூரில் மாமியாரை மருமகள் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்  

Written by - Bhuvaneshwari P S | Edited by - S.Karthikeyan | Last Updated : Dec 12, 2023, 01:50 PM IST
  • மாமியாரை கொலை செய்த மருமகள்
  • குடும்ப சண்டையில் நேர்ந்த சோகம்
  • காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை
மாமியாரை வெட்டி கொலை செய்த மருமகள்! அதிர்ச்சிப் பின்னணி!  title=

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள கழுகபுளிக்காட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி பர்வீன்பானுவுக்கும்  ஈடையே குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் பர்வீன்பானுவை ஜேம்ஸ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் மனைவி பர்வீன் பானு  புகார் அளித்துள்ளார். மனைவியை தாக்கிய புகாரின் பேரில் காவல்துறையினர் ஜேம்ஸை கைது செய்துள்ளனர். அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | மிக்ஜாம் நிவாரண நிதி: பாதிக்கப்பட்டவர்கள் பெறுவது எப்படி?

இந்நிலையில் ஜெயிலில் உள்ள தனது மகனை ஜாமீன் எடுக்க அவரது தாய் ஆரோக்கிய மேரி முயற்சி செய்து உள்ளார். இது பர்வீன்பானுக்கு பிடிக்கவில்லை. தன்னை தாக்கிய கணவன் சிறை தண்டனை அனுபவித்தால் தான் புத்தி வரும் என அவர் தொடர்ந்து கூறி வந்துள்ளார். அதோடு பல்வேறு வழக்குகளிலும் ஜேம்ஸ் சிக்கி வந்ததால் அது பர்வீன் பானுவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

ஆனால் மகன் பாசத்தால் ஜேம்ஸை ஜாமீனில் எடுக்க அவரது தாய் தீவிரம் காட்டி வந்துள்ளார். இதனால் மருமகளுக்கும் - மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மருமகள் ஆரோக்கிய மேரியை அரிவாளால் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் ஆரோக்கிய மேரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆரோக்யமேரியின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். 

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பர்வீன்பானுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப சண்டை காரணமாக மாமியாரை மருமகள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | பொம்மை முதலமைச்சரே வெள்ளை அறிக்கை கொடுங்க - ஜெயக்குமார் விளாசல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News