தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியானது!

தமிழக காவல் துறையில் ஆயுதப்படை காவலர் தேர்வு முடிவுகள் வெளியானது!

Written by - Mukesh M | Last Updated : Apr 15, 2018, 02:15 PM IST
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியானது! title=

தமிழக காவல் துறையில் ஆயுதப்படை காவலர் தேர்வு முடிவுகள் வெளியானது!

6,140 காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 11-ஆம் நாள் நடைப்பெற்றது. இத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியானது!

தமிழக காவல் துறையில் ஆயுதப்படையில் காலியாக உள்ள 5,538 இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் காலியாக உள்ள 340 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் காலியாக உள்ள 216 தீயணைப்போர் மற்றும் 46 பின்னடைவு காலி பணியிடங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 6,140 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள் கடந்த மார்ச் 11-ஆம் நாள் நடைப்பெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நடத்திய எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று 32 மாவட்டங்களில் 232 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் இத்தேர்வின் முடிவுகளை இன்று காலை தேர்வு குழுமம் வெளியிட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை தெரிந்துக்கொள்ள...

  • tnusrbonline.org  என்னும் இணையப் பக்கத்தில் Login செய்ய வேண்டும்.
  • பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லினை உள்ளிடவும்.
  • பின்னர் உங்கள் திரையில் தேர்வு முடிவுகள் தெரிவதை காணலாம்.

தேர்ச்சி பெற்ற தேர்வாளர்கள் அடுத்ததாக உடல் தகுதி தேர்விற்கு அழைக்கப்படுவர்.

  • TNUSRB தேர்வின் விடைகளை பார்க்க.. இங்க Click செய்யவும்.

Trending News