COVID-19 Update Today: தமிழகத்தில் 3479 பேர் பாதிப்பு, 73 பேர் உயிர் இழப்பு

இன்று தமிழ்நாட்டில் 3479 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,03,481 ஆக உயர்ந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 6, 2021, 08:12 PM IST
COVID-19 Update Today: தமிழகத்தில் 3479 பேர் பாதிப்பு, 73 பேர் உயிர் இழப்பு title=

சென்னை: உலகை ஆட்டிப்படைத்த கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் மே மாதம் உச்சத்தில் இருந்தாலும், புதிதாக ஆட்சி அமைத்த திமுக அரசு பல துரிதமான நடவடிக்கை மூலம் 36,000-ஐத் தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு, மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.

இன்று தமிழ்நாட்டில் 3479 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,03,481 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 209 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 73 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,132 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 34,477 ஆக உள்ளது.

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 55 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 33,132 -ஐ எட்டியுள்ளது. 

ALSO READ |  கொரோனா: இந்த வயதினர்களுக்கு அதிகம் பாதிப்பு; ICMR அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியீடு

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 3,855 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,35,872 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று மொத்தமாக 1,53,390 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 3479 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இன்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,3041 ஆண்களும் 1,438 பெண்களும் அடங்குவர்.

ALSO READ |  கொரோனா 3வது அலை: அக்டோபா்-நவம்பா் மாதங்களில் உச்சம் அடையும்

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் தொடர்ந்து ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி தற்போது 4,000-க்கும் கீழ் வந்துள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் ஊரடங்குக்கு பிறகு ஒரு நாள் தொற்றின் அளவில் நல்ல வீழ்ச்சியைக் காண முடிகிறது. தொற்று குறைந்து வரும் நிலையில், படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News