இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களை சிறைப்பிடிப்பு

Last Updated : Mar 26, 2017, 01:05 PM IST
இலங்கை கடற்படையினர் 12 மீனவர்களை சிறைப்பிடிப்பு title=

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து 176 விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இந்நிலையில் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகுகளையும் 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 

மீனவர்களையும் படகுகளையும் காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 26 மீனவர்களா சிறைபிடித்துச் சென்றுள்ள நிலையில் தற்போது மேலும் 12 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

Trending News