அதிமுகவில் ஒற்றைத் தலைமை - கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி மனு

  அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில் கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 18, 2022, 01:14 PM IST
  • அதிமுகவில் ஒற்றைத் தலைமை எதிரொலி
  • புதிய நியமனங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்க மனு
  • கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க
அதிமுகவில் ஒற்றைத் தலைமை - கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி மனு  title=

அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இதற்கிடையே, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி அக்கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில் பொதுச் செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த அதிமுக உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. மேலும்,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் புதிய நியமனங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

admk,eps,ops,aiadmk,political,அதிமுகவில் ஒற்றைத் தலைமை,அதிமுக ஒற்றைத் தலைமை,இபிஎஸ்,ஓபிஎஸ்,எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்,கட்சி, அரசியல், டிஎம்கே, திமுக, எடிஎம்கே,அதிமுக

இந்நிலையில், ஜூன் 23ல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. கட்சியில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்துள்ள நிலையில், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளுடன் இடைக்கால மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கட்சி விதிகள் படி நிர்வாக ரீதியாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களான பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டுதல், கட்சி ஆட்சிமன்ற குழு அமைத்தல் மற்றும் உட்கட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிடுதல் போன்றவற்றை அதிமுக கட்சி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்த தடை விதிக்கக் கோரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மோடியை கோர்த்துவிட்ட ஓபிஎஸ்... கடுப்பில் டெல்லி?

highcourt

கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் எனவும், செயற்குழுவால் நியமிக்கப்பட்ட தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் பதவியில் நீடிக்க தடை விதிக்கவும் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர்களை நீக்கவும், புதியதாக கட்சி  பதவிகளில் நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இந்த இடைக்கால மனுக்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | படிச்ச முட்டாள்களிலேயே No.1 முட்டாள் அண்ணாமலை - யார் சொன்னது ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News