’தலைவர் is back’ ஜாமீனில் வெளியே வந்து ஆடியோ வெளியிட்ட Myv3ads நிறுவனர் சக்தி ஆனந்த்

ஜாமீனில் வெளியே வந்த மை.வி.3 ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தன், ’தலைவர் is back’ என்ற தலைப்பில் தனது யூடியூப் சேனலில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 16, 2024, 11:38 AM IST
  • மைவி3 ஆனந்த் சக்தி ஆனந்த் ரிலீஸ்
  • பெயிலில் வெளியே வந்துள்ளார் அவர்
  • தலைவர் இஸ் பேக் என ஆடியோ வெளியிட்டார்
’தலைவர் is back’ ஜாமீனில் வெளியே வந்து ஆடியோ வெளியிட்ட Myv3ads நிறுவனர் சக்தி ஆனந்த் title=

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த "மை வி 3" ஆட்ஸ் என்ற நிறுவனம் நடந்து வருகிறது. இதில் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். "மை வி3" ஆட்ஸ் நிறுவனம் மற்றும் நிறுவனத்தின் MD சக்தி ஆனந்தன்  மீது அண்மையில், சிலர் மாநகர காவல்துறை  ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் தன் மீதும், "மை வி3" ஆட்ஸ் நிறுவனம் மீதும் பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உரிமையாளர் சக்தி ஆனந்தன் தனது நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 10 ஆம் தேதி போராட்டம் நடத்தினார். 

மேலும் படிக்க | அண்ணாமலை தூத்துக்குடியில் போட்டியிட்டால் டெபாசிட் கிடைகாது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சவால்

ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் அவரிடம் மனுவை பெற்ற பிறகும் காவல் ஆணையர் வரவேண்டும் என 200"க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போக போலீசார் அறிவுறுத்திய போதும் கலைந்து போகாமல் காவல் ஆணையரை சந்திக்காமல் போக மாட்டோம் எனக்கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். சக்தி ஆனந்தை அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

நிறுவனரை தொடர்ந்து "மை வி3" ஆட்ஸ் நிறுவனத்தின் மண்டல இயக்குநர்கள் ஐந்து பேர், அனுமதியின்றி கூடியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். "மை வி 3" ஆட்ஸ் நிறுவனர் சக்தி ஆனந்தை  ஒரு நாள் மட்டும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து மத்திய சிறையில் அடைத்தனர். சக்தி ஆனந்தன் தரப்பில் ஜாமீன் கேட்டு நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்திரவிட்டார்.

ஜாமீன் கிடைத்த சக்தி ஆனந்தன் நேற்றிரவு கோவை மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த சக்தி ஆனந்தன் தனது யூடியூப் சேனலில் "தலைவர் is back" என தலைப்பிட்டு , வாடிக்கையாளர்களுக்கு உரிய சலுகைகள் திட்டமிட்டபடி  அனைத்தும் கிடைக்கும் என்ற ஆடியோவை  வெளியிட்டுள்ளர்.

மேலும் படிக்க | இனி மாஞ்சோலைக்கு சுற்றுலா செல்லலாம்... கட்டுபாடுகளுடன் அனுமதித்த வனத்துறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News