ஆர்.கே.நகர் தேர்தல்: தினகரன் பெற்ற வெற்றி செல்லும்- சென்னை ஐகோர்ட்!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

Last Updated : Jun 20, 2018, 12:07 PM IST
ஆர்.கே.நகர் தேர்தல்: தினகரன் பெற்ற வெற்றி செல்லும்- சென்னை ஐகோர்ட்! title=

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே,நகர் தொகுதி காலியாக இருந்த. இந்த தொகுதிக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 21-ம் தேதி நடந்தது. இதில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 89 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

இதையொட்டி இந்த வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சியை சேர்ந்தவர் எம்.எல்.ரவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரித்த சென்னை ஐகோர்ட், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.  

Trending News