Ration Update: ரூ.2000 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இன்று முதல் விநியோகம்

தமிழகத்தில் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக இரண்டாயிரம் ரூபாய் ஆகியவை நியாயவிலைக் கடைகள் மூலம் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 15, 2021, 08:41 AM IST
  • கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்
  • இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும்
  • கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ரே‌ஷன் கடைகளில் வழங்கப்பட்டது.
Ration Update: ரூ.2000 மளிகைப் பொருட்கள் தொகுப்பு இன்று முதல் விநியோகம் title=

கொரோனா காலத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு (TN Lockdown) வரும் 21ம் தேதி முடிய நடைமுறைப்படுத்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி காய்கறிகள், மளிகைக் கடைகள் மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி முடிய செயல்பட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 

அதேபோல் கொரோனா நிவாரணமாக (Corona Relief) ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதன்படி கடந்த மாதம் 7 ஆம் தேதி கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இந்த நிவாரண உதவி 2 கட்டங்களாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி கடந்த மாதம் ரூ.2 ஆயிரம் நிவாரணம் ரே‌ஷன் கடைகளில் (Ration Shops) வழங்கப்பட்டது.

ALSO READ | ரேஷன் கடைகளில் அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்

இந்நிலையில் இரண்டாவது முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண உதவியுடன் 14 மளிகைப்பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார். இந்த திட்டத்தில் ரே‌ஷன் கடைகளில் 14 வகையான மளிகை பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. 

அதன்படி தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக இரண்டாயிரம் ரூபாய் ஆகியவை நியாயவிலைக் கடைகள் மூலம் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

இந்த நிவாரணத்தை வழங்குவதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு தேதி குறிப்பிட்டு ஏற்கெனவே டோக்கன் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பொருட்கள் இம்மாதம் இறுதிவரை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.மேலும் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்பதாய் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர்கள் நியமனம் செய்யபட்டு உள்ளனர். அதேபோல் மளிகைப் பொருட்களை வெளிச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளில் (Ration Shops) அளிக்கப்படவுள்ள 14 மளிகை பொருட்களின் முழு விவரம்
சர்க்கரை- 500 கிராம்
கோதுமை – 1 கிலோ 
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம் 
கடலை பருப்பு- 250 கிராம் 
டீ தூள் -200கிராம் 
கடுகு- 100 கிராம் 
சீரகம்- 100 கிராம் 
மஞ்சள் தூள்- 100 கிராம் 
மிளகாய் தூள்- 100 கிராம் 
குளியல் சோப்பு 25 கிராம் – 1 
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1 

ALSO READ | Ration Shops Timing: ரேஷன் கடைகள் செயல்படும் நேரத்தில் புதிய மாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News