கட்டுப்பாட்டுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: ரஜினிகாந்த்

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். 

Last Updated : Dec 27, 2017, 09:15 AM IST
கட்டுப்பாட்டுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: ரஜினிகாந்த் title=

சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் 2வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த். 
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நேற்று முதல் சந்தித்து வருகிறார்.

ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

நேற்று முதல் தொடங்கப்பட்ட இந்த சந்திப்பு இன்று 2வது நாளாக ரசிகர்களை சந்தித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். 

நேற்று (26-12-2017) பேசியபோது:- அரசியல் விருப்பம் பற்றி 31-ம் தேதி அறிவிப்பேன்: நடிகர் ரஜினிகாந்த்!

சந்திப்பின் போது பேசிய நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்கள் கட்டுப்பாட்டுடன் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, உங்களுக்கு குடும்பம் தான் முக்கியம் என்று கூறியுள்ளார். 

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். ரசிகர்களுடனான சந்திப்பில் ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள், உங்களை பார்த்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், உங்களிடம் நிறைய பேசவேண்டி உள்ளது என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

 

 

 

Trending News