ஓபிஎஸ்-ஸுக்கு மீண்டும் நோட்டிஸ்?

Last Updated : Mar 29, 2017, 08:47 AM IST
ஓபிஎஸ்-ஸுக்கு மீண்டும் நோட்டிஸ்? title=

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடந்த 6 ஆண்டுகளாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை வீட்டில் வசித்து வருகிறார். 2011 - 2016 ஆம் ஆண்டுகளில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக கட்சி தமிழகத்தை ஆண்ட போது நிதி அமைச்சராக இருந்தாவர் ஓ. பன்னீர்செல்வம். அப்போதிலிருந்தே தென்பெண்ணை வீட்டில் அவர் வசித்து வருகிறார். 

இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளந்த்தது. மேலும், சசிகலா மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் ஓ. பன்னீர்செல்வம் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

சசிகலா மீது குற்றச்சாட்டுக்களை வைத்த பின்னர், தமிழக அரசும், சசிகலா தரப்பினரும் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு வகைகளில் தொந்தரவுகள், மிரட்டல்களை விடுத்து வந்தனர். இறுதியாக கீரின்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பினார்கள்.

இதனையடுத்து, போயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டிற்கு பின்புறம் உள்ள வீனஸ் காலனியில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து ஓ. பன்னீர்செல்வம் அங்கு குடியேறினார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை தென்பெண்ணை வீட்டை தொண்டர்களை சந்திக்கும் இடமாக பயன்படுத்திக் கொள்ள ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்தனர். இதனை அடுத்து கிரீன்வேஸ் சாலை வீட்டை ஓ. பன்னீர்செல்வம் முழுமையாக காலி செய்யவில்லை. 

இதனையடுத்து, ஓ. பன்னீர்செல்வத்துக்கு பொதுப்பணித்துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இரண்டு வாரங்களுக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

Trending News