பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தள்ளிவைப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Feb 12, 2019, 10:09 AM IST
பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை தள்ளிவைப்பு title=

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர்  மோடி முக்கிய நகரங்களுக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். 

அந்த வகையில் கடந்த 27-ம் தேதி பிரதமர் மோடி மதுரை வந்திருந்தார். அங்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அதன்பின்னர் கடந்த 10-ம் தேதி  திருப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். 

அடுத்து பிப்ரவரி 19-ம் தேதி மீண்டும் தமிழகம் வரும் மோடி, கன்னியாகுமரியில் நடைபெறும் அப்போது பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதிக்குப் பதில், மார்ச் 1-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை தர உள்ளதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Trending News