ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் செய்தவர்கள் கைது- மக்கள் எதிர்ப்பு

ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Last Updated : Jan 17, 2017, 09:58 AM IST
ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் செய்தவர்கள் கைது- மக்கள் எதிர்ப்பு  title=

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 21 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டம் நடத்தியவர்கள் சமூக வலைதளங்கள் மூலம் ஒன்று சேர்ந்தவர்கள். 

இந்நிலையில், போராட்டகாரர்கள் கைது செய்யப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் பேரணியாக சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைதானவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

போராட்டம் நடத்தியவர்களுடன் மாவட்ட எஸ்.பி., விஜயேந்திர பிதரி பேச்சுவார்த்தை நடத்தினர். கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் விடுதலை செய்யப்படுவார். அமைதியான போராட்டத்திற்கு போலீசார் ஒத்துழைப்பு அளித்து வருகிறது எனக்கூறினார். இருப்பினும் பொது மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல், போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடந்தது. 

Trending News