ஓபிஎஸ் - தங்க தமிழ்செல்வன் திடீர் சந்திப்பு: பின்னணி இதுதான்

திமுகவில் மாவட்ட செயலாளராக இருக்கும் தங்க தமிழ்செல்வன், ஓ.பன்னீர்செல்வத்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். தனிப்பட்ட ரீதியான சந்திப்பு என்றாலும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 13, 2023, 06:37 PM IST
  • ஓ.பி.எஸ் - தங்க தமிழ்செல்வன் சந்திப்பு
  • இல்ல திருமண விழாவுக்கு அழைத்தார்
  • அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கும் சலசலப்பு
ஓபிஎஸ் - தங்க தமிழ்செல்வன் திடீர் சந்திப்பு: பின்னணி இதுதான் title=

 

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அரசியல் களத்தில் பரம எதிரிகள். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் அதிமுகவில் இருந்தாலும் எதிரும் புதிருமாகவே இருந்தனர். ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை உட்கட்சி பூசலாக இருந்த அவர்களின் முரண்பாடு ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு வெளிப்படையாக வெடித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் அணி தனியாக செயல்பட்டபோது, டிடிவி தினகரனுடன் சேர்ந்து இயங்கிய தங்க தமிழ்செல்வன் அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பின்னாளில் அங்கிருந்தும் இருந்தும் விலகினார். அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் இருந்த நெருக்கம் காரணமாக பின்னாளில் திமுகவில் சேர்ந்து கொண்டார். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியிடம் தீவிர விசாரணை: கரூரில் உள்ள சொகுசு பங்களா வீட்டில் மீண்டும் சோதனை

திமுகவில் சேர்ந்த பிறகு ஓ.பன்னீர் செல்வத்தின் மீதும் அவருடைய மகன் ஓ.பி.ரவீந்திரநாத் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ஆட்சியில் பங்கெடுத்த சமயத்திலும் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார் தங்க தமிழ்செல்வன். கோடிக்கணக்கான சொத்துகளை ஓ.பன்னீர்செல்வமும், ஓ.பி.ரவீந்திரநாத்தும் குவித்து வைத்திருப்பதாக ஒவ்வொரு பேட்டியிலும் விமர்சித்துக் கொண்டே இருந்தார். தேர்தலில் ஓ.பி.எஸ் மற்றும் ரவீந்திரநாத்துக்கு எதிராகவும் களம் கண்டார். ஆனால், தங்க தமிழ் செல்வனால் வெல்ல முடியவில்லை. 

தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்தியே ஆக வேண்டும் என்பது தான் அவருடைய பிரதான இலக்காக கூட இருந்தது. அதுக்காகவே பகீரத முயற்சிகளையெல்லாம் தொடர்ச்சியாக எடுத்து வந்தார் தங்க தமிழ்செல்வன். தான் இருக்கும் கட்சியின் கோட்பாடு கொள்கைகள் கூட இரண்டாம்பட்சம் தான், அவரைப் பொறுத்தவரை ஓ.பி.எஸ் தான் முதல் எதிரி என்கிற அளவுக்கு தங்க தமிழ் செல்வனின் பேட்டிகள் இதுவரை இருந்திருக்கிறது.

ஆனால், ஆண்டு ஆண்டு காலமாக சொல்லப்படும் பழமொழியான அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்கிற கூற்று மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. தேனியில் ஓ.பன்னீர்செல்வத்தை அவருடைய வீட்டில் சந்தித்த திமுக மாவட்ட செயலாளரான தங்க தமிழ்செல்வன் தன்னுடைய இல்ல திருமண விழா அழைப்பிதழை கொடுத்து அழைத்தார். இது தொடர்பான புகைப்படங்களை தேனியில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாக பரப்பிக் கொண்டிருக்கின்றனர். 

மேலும் படிக்க | அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை எப்படி உள்ளது? சமீபத்திய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News