நீட் தேர்வு ரத்து செய்க!! பள்ளி மாணவிகள் சாலைமறியல்!!

Last Updated : Sep 9, 2017, 04:00 PM IST
நீட் தேர்வு ரத்து செய்க!! பள்ளி மாணவிகள் சாலைமறியல்!! title=

சென்னையில் நீட் தேர்வை ரத்து செயக்கோரி பள்ளி மாணவிகள் தீடீர் சாலைமறியல் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனிதா மரணத்தை அடுத்து கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்த்து பல போராட்டங்கள் அரசியல் கட்சி சார்பிலும், மாணவர்கள் சார்பிலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு பள்ளி சேர்ந்த மாணவிகள் பள்ளிக்கு அருகில் அமைத்துள்ள சாலையில் அமர்ந்து நீட் தேர்வை ரத்து செயக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் மாணவிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தினர். முதலில் போராட்டத்தை கைவிட மறுத்த மாணவிகள், தொடர்ந்து நடத்திய பேச்சுவாரத்தையால் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்பி சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

Trending News