யாருடனும் கூட்டணி கிடையாது; திருவாரூர் தொகுதியில் தனித்துப் போட்டி: சீமான்

திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என சீமான் அறிவிப்பு.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2019, 03:44 PM IST
யாருடனும் கூட்டணி கிடையாது; திருவாரூர் தொகுதியில் தனித்துப் போட்டி: சீமான் title=

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி காலியான திருவாரூர் தொகுதியில் வரும் ஜனவரி 28-ஆம் நாள் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வேட்புமனு தாக்கல் சனவரி 3 ஆம் தேதி முதல் சனவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும். வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் சனவரி 14 ஆம் தேதி எனவும், திருவாரூர் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை சனவரி 31 ஆம் தேதி நடைபெறும் எனவும் தமிழகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்தநிலையில் திருவாரூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். இந்த தொகுதிக்கான வேட்பாளரை சனவரி 10 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி அறிவிக்கும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Trending News