அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மநீம தேர்தல் ஆணையத்தில் புகார்!

இந்து தீவிரவாதி விவகாரத்தில் கமல் ஹானை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது!

Last Updated : May 16, 2019, 03:47 PM IST
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மநீம தேர்தல் ஆணையத்தில் புகார்! title=

இந்து தீவிரவாதி விவகாரத்தில் கமல் ஹானை கடுமையாக விமர்சித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது!

தமிழ்நாட்டில் வரும் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பிரசாரம் செய்தார்.
 
பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து கமலின் கருத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் தனது ட்விட்டர் பக்கத்தில் "எப்படி கலைக்கு மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்திற்கும் மதம் கிடையாது" என தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.

இவரைத்தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள், சிறுபான்மையினர் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் "யாரை திருப்தி படுத்த கமல் இவ்வாறு பேசி வருகின்றார்., யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் அதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறைகூறுவதாக என கேள்வி எழுப்பினார். 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த கருத்திற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News