மேகதாது அணை ஏன் கூடாது என ஆதாரத்தோடு கர்நாடக அரசிடம் சொல்வோம் - அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் ஏன் அந்த அணைக்கூடாது என்பதை ஆதாரத்துடன் எடுத்துரைப்போம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 4, 2023, 05:34 PM IST
  • டெல்லி செல்லும் அமைச்சர் துரைமுருகன்
  • காவிரி நீர் விடுவது குறித்து முறையிட திட்டம்
  • கர்நாடக அரசு முன்வந்தால் பேசத்தயார்
மேகதாது அணை ஏன் கூடாது என ஆதாரத்தோடு கர்நாடக அரசிடம் சொல்வோம் - அமைச்சர் துரைமுருகன் title=

சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடக மாநிலத்தில் இருந்து காவேரி நீரை திறந்துவிட வில்லை. ஆகையால் காவரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் அவர்களுக்கு வலியுறுத்த சொல்லவே எனது டெல்லி பயணம் என்றார். பருவ மழை குறைவால் தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு இவ்வாறு பதில் அளித்த அவர், காவிரி நீரை ஒவ்வொரு மாதம் எவ்வளவு வழங்க வேண்டுமோ அதனை வழங்க வேண்டும் என கர்நாடகா மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறினார். 

மேலும் படிக்க | எடப்பாடி பழனிசாமியின் புதிய பிரச்சார வாகனத்துக்கு செல்லூர் ராஜூவின் பலே விளக்கம்

தண்ணீர் கொடுக்க முடியாத காரணத்தை அவர்கள் தெரிவிக்கின்றனர். வேண்டும் என்று நமது காரணத்தை தெரிவிக்கிறோம். நமக்கு கடந்த ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் 2.833 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கி 6.357 டி.எம்.சி நீர் நமக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேக தாதுவில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்துலும் பேச கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்ற ஆணையே உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக நாம் ஏன் அதனை கிளர வேண்டும். தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன் கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். ஆனால் ஏன் அணை கூடாது என்பதை காரணத்தோடு விளக்கம் கொடுப்போம் என்றார்.  திட்டமிட்டபடி வரும் 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்குமா என்பது பற்றி தனக்கு தெரியாது. மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடை மடை வரை சென்றுள்ளது. ஆனால் அதுகுறித்து தெரியாமல் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார் என்றார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு குறித்து கேட்ட போது, என் விசயம் கேட்டிங்க அது போதும், என்னை ஆள விடுங்க எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | வியாசர்பாடி மடாலயத்தில் இன்றைய தினமே பணிகள் தொடங்கும் - சேகர்பாபு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News