கரூர்: மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற மாணவர் கைது

Last Updated : Aug 31, 2016, 02:24 PM IST
கரூர்: மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற மாணவர் கைது  title=

சிவகங்கை மாவட்டம், மானா மதுரையைச் சேர்ந்த சோனாலி(வயது19). கரூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சோனாலி 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதே கல்லூரியில், கடந்த கல்வி ஆண்டில் 3-ம் ஆண்டு படித்த வந்த உதயகுமார்(வயது21) சோனாலியை ஒரு தலையாகக் காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சோனாலி அவரது காதலை ஏற்கவில்லை. இதற்கிடையே, கடந்த நவம்பர் முதல் உதயகுமார் கல்லூரிக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கல்லூரிக்குள் நுழைந்த உதயகுமார் வகுப்பறையில் இருந்த சோனாலியை கட்டையால் தலையில் உதயகுமார் தாக்கியுள்ளார். தடுக்க வந்தவர்களையும் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில், பலத்த காயமடைந்த சோனாலியை அங்கு இருந்தவர்கள் மீட்டு, கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சோனாலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Trending News