ஜெயலலிதா நலம்பெற அதிமுகவினர் தொழுகை

Last Updated : Oct 5, 2016, 02:10 PM IST
ஜெயலலிதா நலம்பெற அதிமுகவினர் தொழுகை title=

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நலம்பெற வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில்களில் சிறப்பு பிராத்தனை செய்து வருகின்றனர். அப்போலோ மருத்துவமனை முன்பு நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தமிழ்மகன் உசேன் தலைமையில் முதல்வர் நலம் பெற துஆ தொழுகை நடத்தினர். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். 

மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நாள்தோறும் முதல்வர் உடல்நிலை குறித்து, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதற்கிடையில் அவரது உடல்நிலை குறித்து தகவல் அறிந்து, மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள், கட்சிக்காரர்கள் தினந்தோறும் வந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.ஜெயலலிதா நலம் பெற வேண்டி அனைத்து மதத்தினரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது புகைப்படத்தை ஏந்தி, நலம்பெற வேண்டி பூஜைகள், தொழுகைகள் மற்றும் பிரார்த்தனை நடத்தப்படுகிறது.

 

 

 

 

Trending News