Chandrayaan 3: சந்திரயானுக்கும் லூனாவுக்கு போட்டியா...? - மயில்சாமி அண்ணாதுரை சொல்வது இதுதான்!

Chandrayaan 3: சந்திரயான் லூனாவுக்கும் போட்டி என்று சொல்ல முடியாது என திருச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி அளித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Aug 19, 2023, 06:41 PM IST
  • சந்திரப் பயணம் உலக நாடுகளின் அமைதிக்கு வழி வகுக்கும் - மயில்சாமி அண்ணாதுரை
  • நிலாவை விண்வெளியில் பிரிக்கப்பட இன்னொரு கண்டமாக நான் பார்க்கிறேன் - மயில்சாமி அண்ணாதுரை
  • அடுத்த சந்திரயான் 4 விண்கலத்தையும் அனுப்பும் திட்டம் உள்ளது - மயில்சாமி அண்ணாதுரை
Chandrayaan 3: சந்திரயானுக்கும் லூனாவுக்கு போட்டியா...? - மயில்சாமி அண்ணாதுரை சொல்வது இதுதான்! title=

Chandrayaan 3: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், 'நிலாவும், உலக அமைதியும்' என்ற தலைப்பில் மாணவிகள் மத்தியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை இன்று (ஆக. 19) ஆற்றினார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,"சந்திராயன் 3 விண்கலன் நிலவை நெருங்கி உள்ளது. அதே சமயம் நிலாவும் உலக அமைதியும் என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேச உள்ளேன். 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்க - ரஷ்யா இடையே பனிபோர் உச்சத்தில் இருந்தது. 

தற்போது திரும்ப நிலவை நோக்கிய பயணம் என்பதற்கு விதை போட்டது சந்திராயன் 1 தான். அந்த விண்கலம் தான் நிலவில் நீர் இருப்பதை கண்டுபிடித்தது. எனவே திரும்பவும் அனைவரும் நிலவை தாண்டி நிலவின் தென் துருவம் இடத்தை நோக்கி உலக நாடுகளான ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், கொரியா, வளைகுடா நாடுகள் ஆகியவை வர உள்ளன.  

இந்த சந்திரப் பயணம் உலக நாடுகள் அமைதி மற்றும் முன்னேற்றம் குறித்தாக இருக்கும். வெப்ப மண்டலங்களான வளைகுடா நாடுகள் எண்ணெய் வளத்தால் மாற்றம் அடைந்து மனிதர்கள் வாழ்வதற்கான மாற்றம் உருவானது. அதேபோல நிலவிலும் அந்த மாற்றம் நிகழலாம். நிலவை சந்திராயன் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிலவைத் தாண்டி, தென் துருவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

மேலும் படிக்க | விக்ரம் லேண்டரின் வேகம் குறைப்பு!

பல நாடுகளும் இதற்கான பயணத்தை தொடங்கி உள்ளனர். நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரம் மற்றும் பிற மூலப் பொருட்களின் இருப்பு குறித்த நோக்கத்தில் இந்த பயணம் உள்ளது. அறிவியல் அடுத்த கட்டமாக போவதற்கும், மனிதன் மீண்டும் நிலாவிற்கு செல்லும் வகையில் இம்முயற்சி அமையும். நிலாவை விண்வெளியில் பிரிக்கப்பட இன்னொரு கண்டமாக நான் பார்க்கிறேன்.

இந்தியாவை கண்டுபிடிக்க வந்த கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்து போல, அமெரிக்கா கண்டுபிடிக்க தவறிய நிலவில் நீர் இருப்பதை நாம் கண்டுபிடித்து உள்ளோம். எனவே இந்தியா கண்டுபிடித்த இன்னொரு அமெரிக்காவாக நிலவை பார்க்கிறேன். மேலும் நிலவில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க முன்னெடுப்பில் உள்ளது, அதில் இந்தியாவும் பங்குபெறும்.

இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டினால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மேலும் வளர்ச்சி அடையும். உலக அமைதிக்கான இடமாக நிலவு இருக்கும். அதில் இந்தியா முன்னோடியாக விளங்கும். அனைத்தும்
நல்ல படியாக உள்ளது. சந்திராயன் இறங்கக்கூடிய இடம் கரடு, முரடாக இல்லாமல் தரையிறங்க ஏதுவாக பார்த்துள்ளோம். 

சந்திராயன், லூனா, இவற்றிற்கிடையே போட்டி என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியான பயணத்தில் தற்போது உள்ளது. இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டின் வேகம் குறைவாக இருந்த போதிலும், வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. எனவே தான் PSLV, GSLV ராக்கெட்டுகளை எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறோம். 

சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக இறங்கும் வகையிலும், எதிர்காலத்தில் சந்திராயன் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளது" என்றார். 

மேலும் படிக்க | விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும்போது இதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம் - காத்திருக்கும் பெரிய சிக்கல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News