சென்னை மெட்ரோவில் 4 நாட்களுக்கு யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோவில் 4 நாட்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடத்த திட்டம்! 

Last Updated : Jun 21, 2018, 02:05 PM IST
சென்னை மெட்ரோவில் 4 நாட்களுக்கு யோகா பயிற்சி!  title=

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சென்னை மெட்ரோவில் 4 நாட்களுக்கு யோகா பயிற்சி முகாம் நடத்த திட்டம்! 

நாடு முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாட பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று முதல் 24-ந் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது.  

இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சர்வதேச யோகா தினத்தையொட்டி 21-ந் தேதி(இன்று) முதல் 24-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வரை காலை மற்றும் மாலை நேரங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் நடைபெறுகிறது. இப்பயிற்சிகளை யோகா ஆசான் சுத்தவெளி சபை ஏ.என்.தனசேகரன் நேரில் அளிக்கிறார். இந்த பயிற்சிகளை 3 வயது முதல் 80 வயதுக்கும் மேற்பட்டோர் வரை அனைவரும் எளிதாக செய்யலாம்.

யோகா மற்றும் தியானப்பயிற்சிகள் 21-ந் தேதி(இன்று) காலை 6.30 மணி முதல் ஆலந்தூர், மாலை 6 மணி முதல் எழும்பூர், 22-ந் தேதி காலையில் சைதாப்பேட்டை, மாலையில் டி.எம்.எஸ், 23-ந் தேதி காலையில் வடபழனி, மாலையில் அண்ணாநகர் டவர், 24-ந் தேதி காலையில் திருமங்கலம், மாலையில் செனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நடைபெறும்.

தொடர் மெட்ரோ ரெயில் பயணம் உங்கள் பயணத்தை சுகமாக்கும். தொடர் யோகா பயிற்சிகள் உங்கள் உடல்நலனை வலுவாக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

Trending News