மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!

மனைவியின் தற்கொலைக்கு காரணமான பூசாரியைக் கணவன் கழுத்தறுத்துக் கொலை செய்து, போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.   

Written by - Gowtham Natarajan | Last Updated : Mar 7, 2022, 07:23 PM IST
  • பூசாரியைக் கணவன் கழுத்தறுத்துக் கொலை.
  • உயிருக்குப் போராடிய நிலையில் உயிரிழப்பு.
  • கணவன் போலீசில் சரண்.
மனைவியின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்துக் கொன்ற கணவன்!  title=

சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த செட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 85 வயதான காத்தவராயன். இவர் அதே பகுதியில் உள்ள துர்கா கோயிலில் பூசாரியாக வேலைப்பார்த்து வந்தார். சம்பவத்தன்று பூஜைகளை முடித்துவிட்டு கோயில் அருகே கட்டிலில் படுத்து உறங்கியவர், நடு இரவில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் கத்தி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கோவில் அருகே சென்று பார்த்தனர். பேரதிர்ச்சி..! கட்டிலில் ரத்த கறையுடன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் காத்தவராயன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. 

dead

மேலும் படிக்க | மேலூர் அருகே மாயமான இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை?

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காத்தவராயனின் உடலை மீட்டு காப்பாற்றுவதற்குள் எல்லாம் முடிந்து விட்டது, காத்தவராயன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை துவக்கினர். அப்போது பூசாரி காத்தவராயனைக் கழுத்தறுத்து கொலை செய்தது அதே ஊரைச் சேர்ந்த ஆனந்தன் என்பது தெரியவந்தது. பொதுமக்கள் துரத்திப் பிடிக்க முற்பட்ட போது, தப்பி ஓடிய ஆனந்தனை தனிப்படை அமைத்து, பிடிப்பதற்குள் தேவூர் காவல் நிலையத்தில் தாமாகச் சரணடைந்தார். அவரைப் பிடித்து விசாரித்ததில், கொலைக்கான காரணம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 

கொலை செய்யப்பட்ட காத்தவராயனும், கொலை செய்த ஆனந்தனும் உறவினர்கள். ஆனந்தனின் மனைவி பாப்பாத்திக்கு ஆறு வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது. உறவினர் என்பதாலும், பூசாரி என்பதாலும் காத்தவராயனிடம் தனது மனைவியை அழைத்துச் சென்ற ஆனந்தன், பூஜை நடத்தியிருக்கிறார். அதற்குப் பிறகு பாப்பாத்தியின் உடல்நிலை முன்பு இருந்ததைக் காட்டிலும் மிகவும் மோசமானது. நாளடைவில் மன நலம் பாதிக்கப்பட்டு பாப்பாத்தியை கட்டுக்குள் கொண்டுவர முடியாத நிலைமை ஏற்பட்டது. ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து பாப்பாத்தி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் ஆனந்தனின் குடும்பம் சோகத்தில் மூழ்கியது. 

அதிலிருந்து மீண்டு வர முடியாமல் ஆறு வருடங்களாக முடங்கிப் போனார்கள். ஒருகட்டத்தில் மனைவியின் மரணத்திற்கு காத்தவராயன்தான் காரணம் என்று, தீராப்பகையை வளர்த்திருக்கிறார், ஆனந்தன். எப்படியாவது காத்தவராயனை பழிதீர்த்தே ஆக வேண்டும் என்று துடியாய் துடித்தவர், திட்டமிட்டபடி ஆத்திரத்தில் அதைச் செய்து முடித்தார். இதனையடுத்து, சரணடைந்த ஆனந்தனைக் கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க | சிறையில் சொகுசு வசதிக்கு உதவி - மருத்துவர் பணியிடமாற்றம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News