முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தங்கம் வென்ற கைபந்து போட்டியாளர்கள்

Last Updated : Oct 5, 2017, 04:34 PM IST
முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தங்கம் வென்ற கைபந்து போட்டியாளர்கள் title=

இமாச்சல் பிரதேசம் சர்கத்தில் இரண்டு நாள் நடைபெற்ற அகில இந்திய கைபந்து போட்டியில் வெற்றி பெற்று தங்க பதக்கம் வென்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினர் இன்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

இந்த சத்திப்பின் போது சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி. கருப்பணன், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என். கிருஷ்ணராஜ் உடன் இருந்தனர்.

அகில இந்திய கைபந்து போட்டியை சம்மர் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News